Pages

Monday 11 March 2013

திரைப்படத்தில் லஞ்சம் வாங்கும் காட்சியில் 'லஞ்சம் தண்டனைக்குரியது'

சின்னத்திரை, திரைப்படத்தில் லஞ்சம் வாங்கும் காட்சியில் 'லஞ்சம் தண்டனைக்குரியது' என்ற வாசகம் வேண்டும்  
           
இன்றைய நாட்டு நடப்புகள் 
         
மதுரை கங்காதரன் 

           


நாம் சின்னத்திரை அல்லது திரைப்படம் பார்க்கின்ற போது இடை இடையே 'சிகரெட் பிடிக்கும் காட்சிகள் அல்லது மது அருந்தும் காட்சிகள்' வரும்போது ஒன்றோ அல்லது இரண்டோ இந்த வாசகங்கள், அதாவது 'புகை பிடிப்பது புற்று நோய் உண்டாகும்' ' புகை பிடிப்பது உயிரைக் குடிக்கும்' என்கிற வாசங்களும் 'மது அருந்துவது வீட்டிற்கும், நாட்டிற்கும் கேடு' என்று கட்டாயம் காட்டுவார்கள். அதன் நோக்கம் இப்படி காட்டினாலாவது மக்கள் அதை நாடுவதை, விரும்புவதை குறைத்துக் கொள்வாரகள் என்பது தான். 

                  

ஆனால் உண்மையில் நடப்பது என்னவென்றால் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை மற்றும் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே தான் இருக்கின்றது. இன்னும் சொல்லப்ப் போனால் அந்த வாசகங்கள் வரும்போது சிறியவர்களின் கவனம் குடிப்பவர்கள், புகை பிடிப்பவர்களை கூர்ந்து பார்க்க நேருகிறது. அது ஒரு விளம்பரமாகவே தெரிகின்றது. அது சரி ஆங்கிலப் படங்களில் வரும்போது ஆங்கிலத்தில் அத்தகைய வாசகங்கள் வருவதில்லை. ஏன்?

       

அதற்குப் பதிலாக சின்னத் திரை மற்றும் திரைப்படங்களில் லஞ்சம் கொடுக்கின்ற காட்சிகள் வரும்போது ' லஞ்சம் வாங்கினால் சிறை தண்டனை கிடைக்கும்' என்றும், பாலியல் பலாத்காரம் நடக்கும் காட்சியில் 'பாலியல் பலாத்காரம் ஆயுள் அல்லது மரண தண்டனை' கிடைக்கும் என்றும் பெண் கொடுமை, விபச்சாரம் , ஏமாற்றுத் திருமணங்கள், பால்யத் திருமணம், முதியோர் கொடுமை, ஆபாசம், கறுப்புப் பணம், பதுக்குதல், தற்கொலை, வரதட்சணை காட்சிகளில் 'கடுமையான தண்டனை கிடைக்கும்' என்றும், அராஜகம், உடலில் ஆசிட் ஊற்றுதல், கொலை செய்யும் காட்சிகளில் 'ஆயுள் அல்லது மரண தண்டனை' உறுதி என்றும், ஏமாற்று, மோசடி, பொய் காட்சிகளில் 'கடுமையான தண்டனை கிடைக்கும்' என்றும், சட்டம் மற்றும் காவல் துறையை மதிக்கதவர்களுக்கு 'XXX ஆண்டுகள் தண்டனை ' கிடைக்கும் என்றும், குழந்தை தொழிலார்கள், அடிமைத் தொழிலார்கள் இருக்கும் காட்சிகளில் 'தண்டனை பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் வரவேண்டும். அது எந்த மொழியானாலும் சரி கண்டிப்பாக அதை பின்பற்றியே தீரவேண்டும் என்கிற கேளிக்கைச் சட்டம் கொண்டுவரப்படவேண்டும். 

                            

அதை 'சின்னத்திரை மற்றும் திரைப்படம்' சென்சாருக்கு வரும்போது காட்டாயம் மேற்கண்ட வாசகம் இருப்பதை உறுதி செய்த பிறகே மக்கள் பார்வைக்கு வெளி வரவேண்டும். இப்போதுள்ள A / U சான்றிதல்கள் ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லை. அப்போது தான் திரைப்படங்கள், எவ்வாறு தரக்குறைவாக, மக்கள் சமுதாயத்தை கெடுக்கும்படி இருக்கின்றது என்பது தெரியும். அதிகமாக வாசகங்கள் வரும் திரைப்படம் கட்டாயம் வன்முறை தூண்டும் திரைப்படம் என்று முத்திரை குத்திட வேண்டும். ஏனென்றால் இத்தகைய விழிப்புணர்வு இல்லாமையால் இளைஞர் சமுதாயம் தெரிந்தோ தெரியாமலோ பல தவறுகள் செய்து வருகிறார்கள். கதாநாயர்கள் எந்த தவறு செய்தாலும் அது சரி தான் என்று இளைய சமுதாயம் உணருவதை தடுத்திடவேண்டும். சட்டம், நீதி மற்றும் தண்டனை பற்றிய விழிப்புணர்வு இருந்தால் தான் நல்ல சமுதாயம் எதிர்பார்க்க முடியும். ஓரளவு சட்டம் பற்றிய தெளிவும், பயமும் இதன் மூலம் கொடுக்கலாம்.

              

இதை நடை முறைப்படுத்தினால் கட்டாயம் நாட்டு மக்களிடையே கண்டிப்பாக நன்மைதரும் மாற்றங்கள் நிகழும். இதை உலகம் முழுவதிலும் நடைமுறைப் படுத்தும்போது மக்களின் வாழ்க்கை பாதுகாப்பாகவும், இயல்பாகவும் இருக்கும். இதை தனி ஒரு மனிதனால் சாதிக்க முடியாது. தன்னார்வத் தொண்டுகளும், மக்கள் உரிமை அமைப்புகளும், மக்கள் சேவை அமைப்புகளும், பெண் பாதுகாப்பு அமைப்புகளும், மக்களும், அரசுகளும் ஒன்று சேர்ந்து ஒலி கொடுத்தால் தான் வெற்றி கிடைக்கும்.

                 

எடுத்தவுடன் அனைத்தும் கொண்டுவருவது என்பது முடியாத காரியம். ஆனால் இப்போது நடைபெறும் லஞ்சம் மற்றும் பெண் கொடுமைகள், பலாத்க்காரம் போன்றவைகளை முதலில் வெகுசீக்கிரமாக கொண்டு வந்தால் மிகவும் நன்றாக இருக்கும். பொது மக்கள் இந்த கருத்துக்களை பற்றி பதிவு செய்தால் இன்னும் அதிகமாக கவனத்திற்கு வரும். உங்கள் பதிவுகள் சக்தியுள்ளதாக இருக்கட்டும். ஆதரவு தாரீர். மாற்றம் கொண்டுவருவோம். புதிய உலகம் படைப்போம். புதுச் சரித்திரம் எழுதுவோம்.

             

நன்றி


வணக்கம்.
      

No comments:

Post a Comment