Pages

Monday 24 October 2016

பெருமைமிகு தமிழ்மொழியா? பிறஎழுத்துக் குப்பைமேடா?

சென்ற 23.10.16 (ஞாயிறு) அன்று திரு. ரவி தமிழ்வாணன் (நிர்வாக இயக்குநர், மணிமேகலைப் பிரசுரம்) முன்னிலையில் நமது மாமதுரை கவிஞர் பேரவைக் கவிஞர் திருமதி மு.வாசுகி அவர்களின் கவிதை படைப்பாகிய 'இவர்களும் இந்நாட்டின் கண்கள்' என்கிற நூலை மாமதுரை கவிஞர் பேரவை, மதுரையில் வெளியிட்ட நிகழ்ச்சியின்போது எடுத்த சில மின்படங்கள்.













அன்றைய கவியரங்கில் நான் படைத்து, வாசித்த கவிதை

பெருமைமிகு தமிழ்மொழியா?
பிறஎழுத்துக் குப்பைமேடா?
புதுக்கவிதை
மதுரை கங்காதரன்

நாட்டுக்கு மட்டுமா சுதந்திரம் பொருந்தும்!
நம் தமிழ்மொழிக்கும் சுதந்திரம் பொருந்துமே!
பிறமொழி கலந்து சுதந்திரமாகப் பேசலாம்?
பிறஎழுத்து சேர்த்து சுதந்திரமாக எழுதலாம்?

குடியிருக்கும் வீட்டினுள்
குப்பையைக் கொட்டுவாயா?
பிறஎழுத்து குப்பை தமிழில் சேர்த்தால்
பிணவாடை வீசாதா?

பெண்களுக்கு கூந்தல் அழகு தரும்
பெண்டிற்கு மீசை அழகு தருமா?
கூந்தலாய் தமிழ் எழுத்து இருக்க
கொடுக்கு மீசையாய் பிறஎழுத்து எதற்கு?

உயிருக்கு ஒப்பான தமிழ்மொழியில்
ஆணியாய் பிற எழுத்துகளை அறைகின்றாயே!
கசாப்புகாரனுக்கு ஆடு பலியாகிறது
காசுக்காக தமிழ் எழுத்துகள் பலியாகிறது.

தமிழா! அரைகுறையாக அந்நியமொழியினை
தமிழில் பேசி மகிழ்ச்சி அடையாதே!
இளித்தவாய்த் தமிழர்கள் கைத்தட்டுவார்கள்

இங்கிலீசுகாரனோ தலையில் குட்டுவான்.

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

No comments:

Post a Comment