Pages

Wednesday 31 August 2016

தமிழ் காக்கும் தகுந்த வழி - புதுக்கவிதை



           தமிழ் காக்கும் தகுந்த வழி
                 புதுக்கவிதை 
             மதுரை கங்காதரன்

         தமிழ்த்தாய் வாழ்த்து

தமிழர்கள் தள்ளிவிடுவதால்
தள்ளாடும் தமிழ்மொழியினை
தாங்கிப் பிடிக்க பல கரங்களைத்
தருவாய் தமிழ்த்தாயே!

தமிழென்ன கண்காட்சிப் பொம்மையா?
தமிழர்களிடமே கூவி கூவி விற்பதற்கு!
தன்மானம் இழந்திடும் தமிழர்களை
தமிழ்த்தாயே காத்திடுவாயாக!

           தமிழ் காக்கும் தகுந்த வழி

பேச்சில் எழுத்தில் தனித்தமிழ் வாசனை இல்லை
நடையில் உடையில் தமிழனின் அடையாளம் இல்லை
ஊடங்கங்கள் அனைத்திலும் ஆங்கிலமொழிக் கலப்பு
தமிழர்கள் தருவதோ சிவப்புக் கம்பள வரவேற்பு 
 
விழியில்லாருக்கு வழி காட்டுவது அறிவுடைமை
விழி உள்ளோர் வழி தவறுவது மடமை தானே
சொர்க்கமாய் தமிழ்வீட்டு முகவரி இருக்க
சொந்தமில்லா ஆங்கிலவீட்டில் அடிவைக்கலாமா?  

அந்நிய மொழிக் காட்டுத்தீயில் கருகுது தமிழ்
அலைபேசி கணினி சுனாமியில் மூழ்குது தமிழ்
இணையதளத்தில் அதிகப் படைப்பில்லாதத் தமிழ்
.மெயிலில் தகவல் பரிமாற்றமில்லாதத் தமிழ்

அன்று ஆமையான தமிழ், ஆங்கில முயலை வென்றது
இன்று ஆங்கில முயல் தமிழ் ஆமையை வெல்கிறது
கணினி விழிப்புணர்வு தமிழனுக்கு தந்திட வேண்டும்
கணித்தமிழ் வளர்க்க அரசு அக்கறை காட்ட வேண்டும்

கணினித் தமிழை எளிதாக்கிட வேண்டும்
கணித்தமிழை தமிழறிஞர்கள் கற்றிட வேண்டும்
பள்ளியில் கணித்தமிழை புகுத்திட வேண்டும்
படைப்புகள் பல இணையதளத்தில் தந்திட வேண்டும்

கணினி இல்லாதது அந்தக் காலம்
கணினி உருவானது இந்தக் காலம்
கணினி மயமாகும் வருங்காலம்
கணித்தமிழ் கற்பதே நல்ல காலம்

உலகம் சுற்றும் தமிழாக 
உருவாகுமே கணினித் தமிழாலே
கணித்தமிழை வளர்த்தாலே
காக்கப்படுமே தமிழ்மொழி!

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

எனக்கு வழங்கிய 'கவிபாரதி' விருது நிகழ்ச்சி

28.8.16 ஞாயிற்றுக் கிழமை அன்று மாமதுரைக் கவிஞர் பேரவை, மணியம்மை மழலையர் பள்ளி, மதுரையில் நடத்திய எழுச்சிக் கவியரங்கத்தில் எனக்கு வழங்கிய 'கவிபாரதி' விருது நிகழ்ச்சியின் சில மின் படங்கள் இதோ..






என்னுடைய இந்தப் பாராட்டை, உலக மக்கள் அனைவருக்கும் சமர்ப்பணம் செய்கிறேன். தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும் உங்கள் அனைவருக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


**************

Sunday 28 August 2016

கவிஞர்களின் புத்தகப் படைப்புகள்

மாமதுரை கவிஞர் பேரவையில் உள்ள சில கவிஞர்களின் புத்தகப் படைப்புகள் இதோ...

நீங்களும் படித்து பயன் பெறுவீர்...















Monday 22 August 2016

NEW DOUBLE SIDE STICKER LABLE IDEA

NEW DOUBLE SIDE STICKER LABLE IDEA
புதிய இரு பக்க ஸ்டிக்கர் லேபிள்
மதுரை கங்காதரன்
இப்போது இருக்கும் ஸ்டிக்கர் லேபிளானது,
ஒரே ஒரு பக்கத்தில் தான் லேபிள் ஸ்டிக்கர்
இருக்கின்றதல்லவா! அதை இரண்டு 
பக்கங்களிலும் இருப்பதற்கான புது யோசனை.



இப்போது இருக்கும் ஸ்டிக்கர் லேபிளானது
ஒரே ஒரு பக்கத்தில் தான் லேபிள் ஸ்டிக்கர்
இருக்கின்றதல்லவா! அந்த ஒரு ஸ்டிக்கர்
லேபிளில் நான்கு வகையான பொருட்கள்
இருக்கின்றன.

1. விடுவிக்கப்படும் வீணாகப்படும் அடி பேப்பர்
2. அதன் மேல் தடவப்பட்ட சிலிகோன் அல்லது மெழுகு பொருள்
3.  அதன் மேல் ஒட்டியுள்ள லேபிள் பேப்பர்
4. அதற்குக் கீழ் தடவப்பட்ட பசை  
புதிய இரு பக்க ஸ்டிக்கர் லேபிளின் நர்லிங் பிளாஸ்டிக் பேப்பர்
(சிலிகோன் அல்லது மெழுகு தடவப்பட்ட பேப்பருக்கு பதிலாக)

இந்த இருபக்க நர்லிங் பாலிதீன் சீட்டுக்கு மேல் பசை தடவிய ஸ்டிக்கர் லேபிளை அதன் முன் பின் இருபக்கத்தில் ஒட்ட வேண்டும்.


பிறகு இருபக்கமும் வழக்கம் போல் ஸ்கோரிங் செய்ய வேண்டும். இப்போது இதனால் உண்டாகும் பலன்களைப் பார்ப்போம். 



மேலும் விவரங்களுக்கு எங்களை இ.மெயில் gangadharan.kk2012@gmail.com அல்லது கைபேசி 9865642333 மூலம் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம். 
******************



Friday 19 August 2016

AN EASY WAY TO DETECT MISSING FLIGHT IN THE SEA…

AN EASY WAY TO DETECT 
MISSING FLIGHT IN THE SEA…
கடலில் காணாமல் போகும் விமானங்களை எளிதாகக் கண்டுபிடிக்க
விழிப்புணர்வுக் கட்டுரை

மதுரை கங்காதரன்

தகவல் தொழிநுட்ப வளர்ச்சி அபரிதமாக முன்னேற்றமடைந்து இருக்கும் கணினி யுகத்தில், சமீபமாக விமானங்கள் கடலைக் கடக்கும் போது காணாமல் போவது மட்டுமில்லாமல் அவைகள் எவ்வளவு தேடியும் கண்டுபிடிக்க முடியாமல் போவது என்பது பெரிய ஏமாற்றத்தைத் தருவது ஒன்றாகும். அது நம்முடைய அறிவுக்கும், விஞ்ஞான வளர்ச்சிக்கும் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சவால் என்றே தோன்றுகின்றது.
ஏனென்றால் 2014 ல் 227 பயணிகளுடன் 8 மார்ச்  2014 ல் 227 பயணிகளுடன் கோலாலம்பூரிலிருந்து புறப்பட்ட மலேசிய ஏர் லைன்ஸ் 370 விமானம் கடலில் விழுந்துக் காணாமல் போனது. அதேபோல் இந்த வருடம் 22 ஜூலை 2016ல் 29 பேருடன் ஆன்டனோவ் ஏ-என் 32 என்கிற இந்திய இராணு விமானம், வங்காள விரிகுடா கடல் பகுதியில் பறக்கும் போது அதில் பயணம் செய்த அனைவரும் கடலில் விழுந்து காணாமல் போனார்களா? அல்லது என்ன ஆனார்கள் என்பது இது வரையில் அறிந்திடாத புதிராக இருக்கின்றது.
இத்தகைய நிகழ்வுகள் வருங்காலத்திலும் தொடராது என்பது என்ன நிச்சயம்? அப்படி ஒருவேளை நிகழ்ந்தால் அதற்கான தீர்வு இருக்கின்றதாநிலத்தில் விமானம் விழுந்தால் எப்படியேனும் கண்டுபிடித்துவிடலாம். அதாவது நிலத்தில் விழும் நொறுங்கிய பாகம் நம் கண்ணிற்கு தெரிந்துவிடும். அந்த இடத்தைச் சுற்றிலும் தேடிப் பார்த்தால் விமானத்தின் 'கறுப்புப் பெட்டி' (Black Box) கட்டாயம் கிடைக்கும். அதன் மூலமாக விமான விபத்துக்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாம். ஒரு விமானம் கடலைக் கடக்கும்போது விபத்து ஏற்பட்டால் எவ்வாறு அதன் இடத்தைக் கண்டுபிடிப்பது?

பொதுவாக இந்த மாதிரிப் பிரச்சனை ஏற்பட்டால் தொழில்நுட்ப வல்லுனர்னர்கள் (Technical Experts) கொடுக்கின்ற தீர்வானது மிக எளிமையாக அதே சமயத்தில் மிகவும் துல்லியமாக இருப்பதோடு, அதிக செலவாகாமல் உடனே எல்லா விமானத்தில் செயல்படுத்த முடியுமாறு இருக்க வேண்டும். அந்த வகையில் இணையதளத்தில் (Internet) தேடும்போது, இதற்கு மூன்று தீர்வுகளைக் கொடுத்திருப்பது தெரியவந்தது. அதனைச் சுருக்கமாகச் சொல்வதென்றால், முதலாவது தீர்வு, விமானம் கடலில் மூழ்கியவுடன் 'கறுப்புப் பெட்டி' தானாக இஜக்ட் (Eject) ஆகி மேலே வரும்படி செய்ய வேண்டும். இரண்டாவது தீர்வு, விமானம் மூழ்கியவுடன் விமானத்திலிருந்து அல்ட்ரா சோனிக் ஒலி சமிஞ்ஞை (Ultra Sonic Signal) எற்படுமாறு செய்திட வேண்டும். மூன்றாவது தீர்வுமேலே பறக்கின்ற ஒவ்வொரு விமானங்கள் மற்ற விமானங்களுடன் தொடர்பில் (Inter flight links) இருக்க வேண்டும். ஏதாவது ஒரு விமானம் பிரச்சனையில் இருப்பது தெரியவந்தால் அதை சம்பந்தப்பட்ட கண்ட்ரோல் ரூமுக்கு (Control room) அந்த தொடர்பில் இருக்கும் விமானம் தெரியப்படுத்த வேண்டும். இவைகளை நடைமுறைப் படுத்துகின்ற சாத்தியக் கூறுகள் எந்த அளவுக்கு இருக்கின்றது என்பது போகப்போகத் தெரியும்.

என்னுடைய எளிய யோசனை:
ஒவ்வொரு விமானத்தில் உயரம் காட்டும் கருவி இருக்கின்றது. விமானம் விபத்துக்குள்ளானால் அது கட்டாயம் மிகக் குறைந்தளவு உயரத்தில் (Minimum Height)  அல்லது  பூஜ்யம் (Zero) அளவுக்கு பறந்திருக்க வேண்டும். அந்த குறைந்த அளவு உயரத்தில் பறக்கும் போது, அந்த சமயம் ஒரு 'சென்ஸார்' (Sensor) உணர்ந்து விமானத்தின் கீழ்பகுதியிலிருந்து மிதக்கும் ஒளியூட்டும் (Fluorescent) தன்மையுடைய பந்துகள் (Balls), குச்சிகள் (Sticks) தானாக வெளிவரச் செய்ய வேண்டும். அவைகள் மரத்தாலானதோ (Wooden), ரப்பர் (Rubber), பிளாஸ்டிக் (Plastics), மெல்லிய உலோகத்தாலும் (Light Metals) இருக்கலாம். அதன் மேல் கட்டாயம் விமானத்தின் பெயரும், எண்ணும், வேறு பல தகவல்கள் அதாவது தொடர்பு கொள்ள வேண்டிய விவரங்கள் அச்சடிக்கப்பட்டோ அல்லது ஸ்டிக்கரில் ஒட்டப்பட்டோ இருக்க வேண்டும். 

கடலில் ஒரு விமானம் விழுவதாக வைத்துக் கொள்வோம். அது குறைந்தபட்ச உயரத்தில் பறக்கும் போது ஒரு சென்ஸார் அதை உணர்ந்து , தானாக ஹைட்ராலிக் முறையில் (Hydraulic) இயங்கும் கதவு உடனே திறக்கச் செய்ய வேண்டும். அதன் வழியாக மிதக்கும் பொருட்களை வெளியில் விழும்படி செய்திட வேண்டும். விமானம் கடலில் மூழ்கினாலும் அந்த மிதக்கும் பொருட்கள் விழுந்த இடத்தை எளிதாகக் காட்டிவிடும். அவ்வளவு எளிதாக, வேகமாக மிதக்கும் பொருட்கள் கரையினை அடையாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.    

ஒரு குறிப்பிட்ட நிமிடத்தில் விமானம் கடலுக்குள் மூழ்கியோ அல்லது நிலத்திலோ விழுந்ததை அல்லது காணாமல் போனது தெரியுமானால் இந்த மிதக்கும் பொருட்கள் அதன் இடத்தைக் காட்டிவிடும். ஒரு சில நிமிடத்தில் அங்கு சென்றால் அனைவரையும் காப்பாற்றும் வாய்ப்பு கிடைக்குமல்லவா! அதே சமயம் சரியாக விமானம் தரையிறங்கினால் இந்த தானியக்கியை அணைத்துவிட வேண்டும்.      
            
உங்களுக்கு இது போன்ற யோசனை ஏதேனும் இருந்தால் தெரியப்படுத்தலாமே!  
*********************************

Tuesday 16 August 2016

AN EASY WAY TO COLLECT TAXES - 'வரி' (Tax) வசூலிக்க எளிய வழி

AN EASY WAY TO COLLECT TAXES            
'வரி' (Tax) வசூலிக்க எளிய வழி
விழிப்புணர்வுக் கட்டுரை  
மதுரை கங்காதரன்
வரியும் வரவும்
சுதந்திரத்திற்கு முன் 'உப்பு' (Salt Tax) க்கு வரி போட்ட வெள்ளையனை எதிர்த்து நம் நாடே கொந்தளித்து 'உப்புச் சத்தியாகிரகம்' செய்தது என்பதை சரித்திரம் சொல்கிறது. ஆனால் சுதந்திரத்திற்குப் பின், ஒவ்வொரு காலகட்டத்தில் நம் நாட்டில் நிலவிய தொழில் அபிவிருத்தி, அதைத் தொடர்ந்து அதன் சேவையில் ஏற்பட்ட  தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் உலகலாவிய பொருளாதார மாற்றம் நிகழ்ந்த காரணமாக அதற்கான வசதி மற்றும் சூழ்நிலையை உருவாக்கவும், கட்டமைப்பு செய்து தரவும், நமது அரசாங்கம் கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு துறையில் 'வரி' என்கிற சாத்தானை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மக்கள் தலையில் ஏற்றி, அதை சுமக்கச்  செய்து கொண்டு வருகின்றது. ஒவ்வொரு வரியை அறிமுகப்படுத்தும் போது, இந்த வரியால் அரசுக்குப் பல ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கும். அதனைக் கொண்டு மக்களுக்குப் பல வசதிகள், சலுகைகள் தர முடியும் என்று சொல்லி சொல்லித் தான் மக்கள் தலையில் திணிக்கிறார்கள். புதிய வரிக்கும், வரி ஏற்றத்திற்கும் ஆதரவாக நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை மற்றும் மாநிலங்களை உறுப்பினர்கள் தங்கள் தலைவர்களுக்கு விசுவாசமாக, தங்கள் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள 'ஆமாம் சாமி' போட்டுச் செயல்படுகிறார்கள் என்பது கொடுமையிலும் கொடுமை.

இது வரையில் கிடைத்தப் புள்ளி விவரப்படி, நமது மக்கள் தொகையில் ஒரு சதவீத மக்கள் மட்டுமே வரியைச் செலுத்துகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! அதில் கிட்டத்தட்ட பாதி சதவீதம் மத்திய, மாநில அரசு ஊழியர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு வேறு வழியில்லை, வரியைக் கட்டியேத் தீர வேண்டும் என்கிற சூழ்நிலை. அதேபோல் மத்திய மாநில அரசு நிறுவனங்கள் அனைத்தும் சரியாக வரியைக் கட்டுவார்கள் என்பதை நம்பித் தான் ஆக வேண்டும். இதில் நலிவுற்ற, நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் எவ்வாறு வரியைக் கட்டுவார்கள்? மற்ற சிறு, பெரு, தனியார் நிறுவனங்கள் எந்த அளவுக்கு நேர்மையாக வரியைச் செலுத்துகிறார்கள்? என்பது நமக்கு வெளிப்படையாகத் தெரியாத ஒன்று. ஆனால் இங்கு ஒரு சந்தேகம் எழுகின்றது. பல பெரிய, நடுத்தர, சிறிய நிறுவனங்களானது அவர்கள் வாங்கிய கடனையே திருப்பிச் செலுத்தாதபோது எப்படி இந்த வரிகளைச் சரியாக அரசாங்கத்திற்குச் செலுத்துவார்கள்?           

வரியா? வலையா?
இந்த அரசாங்கம் மக்கள் மீது விதிக்கும் வரியானது, கடலில் வீசுகின்ற வலைக்குச் சமம். வலையில் சிக்கிய மீன்கள் சுதந்திரமாக இருக்க முடியுமா? இது நாள் வரையில்  நாம் சந்தித்தது என்ன? இருந்த மானியமும், கொடுத்த சலுகையும் பறித்தது தான் மிச்சம். அதோடு விட்டார்களா? பூவோடு சேர்ந்த நார் மணப்பது போல, விலையேற்றத்தோடு வரி ஏற்றமும், கடன் தொல்லையும் தான் நாம் கண்டது. மேலும் கொடுக்கின்ற கொஞ்சம் மானியத்தில் இந்த அடையாள அட்டை கொண்டு வா! அந்த அடையாள அட்டை எங்கே? என்று மக்களை அரசாங்கம், ஏதாவது ஒருவிதத்தில் தொடர்ந்து தொல்லை கொடுப்பதே ஒரு வேலையாக செய்து விட்டது. இப்படி மக்களை பாடாய்ப் படுத்தினால் அவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாய் இருக்குமா? தினம் தினம் நடைமுறையில் பற்பல மாற்றங்கள். நேற்று ஒரு நடைமுறை, இன்று வேறொரு நடைமுறை! நாளை எப்படியோ? இதில் கூத்து என்னவென்றால் படித்தவர்களுக்கே இத்தகைய நடைமுறைகள் சிக்கலாய் தெரியும்போது படிக்காதவர்களும், பாமர மக்களும் என்ன செய்வார்கள்?       

முன்பெல்லாம் புதிதாக 'வரி'யை விதித்தாலோ அல்லது இருக்கின்ற வரியை ஏற்றினாலோ, வியாபாரிகள் தான் முதலில் ஆர்ப்பாட்டமோ அல்லது கண்டனக் குரல்களோ கொடுப்பார்கள். ஏனென்றால் வரியால் பொருட்களின் விலை ஏறும், அதனால் மக்கள் பொருட்கள் வாங்குவது குறையும். அதன் எதிரொலியாக வியாபாரம் படுத்துவிடும் என்கிற எண்ணம் இருந்தது. ஆனால் சமீபமாக, அரசு எந்த ஒரு 'வரி' யை விதித்தாலும் பெரும்பாலான வியாபாரிகளுக்கு கொண்டாட்டமாகத் தான் இருக்கின்றது. அவர்களுக்கு 'வரி' என்பது கூரையை பிய்த்துக் வாரிக் கொடுக்கும் அதிர்ஷ்ட அல்லது ஐஸ்வர்ய தேவதையாகக் காட்சியளிக்கின்றதோ என்று எண்ணத் தோன்றுகின்றது. அதுவும் அரசாங்கமே செய்து தரும் ஏற்பாடு ஆகையால், இதில் சம்பந்தப்பட்டவர்கள் 'வரி'யை வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்களா என்ன?

வரி வசூலா? பகல் கொள்ளையா?
பலர் வியாபாரம் மற்றும் சேவை என்கிற போர்வையில் 'வரி' என்கிற பெயரில் எளிதாக மக்களிடத்தில் வசூல் செய்து, அதை அரசுக்குச் செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்தால் அதற்குப் பெயர் பட்டப் பகல் கொள்ளை என்று சொல்லலாமா? கூடாதா? அதிலும் பணபலம், அரசியல்பலம், பதவி, பேரும், புகழும் இருப்பவர்களுக்குச் சொல்லவே தேவையில்லை! அவர்களில் சிலரின் கறுப்புப் பணம் மற்றும் வரி ஏய்ப்பு பற்றிய செய்திகள் தினம் தினம் பல ஊடகங்களில் வந்த வண்ணம் இருக்கின்றதா? இல்லையா? அதற்குக் காரணம் பெரும்பாலான  மக்களிடத்தில் சட்டம், ஒழுங்கு பற்றிய பயம் துளி கூட இல்லாமல் போய்விட்டது எனலாம். ஏனென்றால் எது நடந்தாலும் ஒரு வழக்கைப் போட்டால் போதும். ஆயுள் வரைக்கும் இழுக்கலாம்! என்கிற எண்ணம் அவர்களின் மனதில் பதிந்துவிட்டது. இதில் அப்பாவிகளும், ஏழைகளும் தான் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்பது உண்மையா? இல்லையா?  

இன்னும் சுருக்கமாகச் சொல்லப் போனால் வியாபாரிகள், நிறுவனங்கள், உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், சிறு, குறு, பெரும் சேவை நிறுவனங்கள், ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள் போன்றவர்கள் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட எழுதப்படாத 'முகவர்கள்' (Agents) என்றே சொல்லவேண்டும். அதாவது அரசாங்கம் எந்தெந்த வரிகள் எதிலெதில் எவ்வளவுக்கெவ்வளவு போடுகின்றதோ அதை மக்களிடத்தில் உடனுக்குடன் வசூலித்து மெல்ல மெல்ல அரசுக்குச் செலுத்தினால் போதும். அதாவது அதை மாதாமாதமோ, காலாண்டுகளாகவோ, வருடம் தோறும் கட்டினால் போதுமாம். யானைக்குப் பக்கத்தில் இருக்கின்ற கரும்பு, யானை வாய்க்குள் போகுமா? அல்லது அப்படியே இருக்குமா? என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

மக்களிடத்தில் வசூலித்த 'வரி' அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டியது அவர்களுடைய  'கடன்'. பொதுவாக கடன் யார் சரியாகச் செலுத்துவார்கள்? சிறு, குறு சேவையும், வியாபாரமும் செய்பவர்களே! இது வரையில் எத்தனை பெரும் வியாபாரிகள், நிறுவனங்கள், சேவை தருபவர்கள், புகழ் பெற்றவர்கள் வரி ஏய்ப்பு செய்யாமல் மக்களிடத்தில் வாங்கிய அத்தனை 'வரி'ப் பணத்தையும் அரசாங்கத்திற்குத் செலுத்தியிருக்கின்றார்கள்? ஆக அரசாங்கம் என்ன தான் புதுப்புது விதமான வரிகள் விதித்தாலும், ஏமாற்றுகிறவர்கள் எப்போதும் எந்த வகையிலாவது ஏமாற்றுவதும், ஒழுங்காகச் செலுத்துபவர்கள் எப்போதும் ஒழுங்காகச் செலுத்துக் கொண்டும் தான் இருக்கிறார்கள்.

பதினாறு வயதிலே ஜி.எஸ்.டி
2000 ஆம் ஆண்டில் ஆரம்பித்த இந்த ஜி.எஸ்.டி வரியின் பயணம் 2016 ம் ஆண்டில் ஒரு வழியாக அரங்கேறி உள்ளது. ஏன் ஜி.எஸ்.டி (GST) என்கிற வரிக்கு இத்தனை ஆர்ப்பாட்டம்? வழக்கம் போல் இது நாள் வரை விதித்த வரி முறைகள் சரியில்லை! அதை சரியாக வசூலிக்க முடியவில்லை. அதனால் அரசுக்கு இவ்வளவு நஷ்டம்! ஆனால் இந்த புதுவரியான ஜி.எஸ்.டி யில் யாரும் ஏமாற்ற முடியாதாம்! அப்படி மட்டும் இருப்பது தெரியவந்தால் இந்நேரம் அரசியல்வாதிகள் சும்மா இருந்திருப்பார்களா? நாட்டையே கொந்தளித்திருக்கச் செய்திருப்பார்கள் அல்லவா? அப்படி இல்லையென்றால் அதில் சில சாதகமாக ஓட்டைகள் இருக்குமோ என்று நினைக்கத் தோன்றுகின்றது.

எந்த வரி எப்படிப் போட்டாலும் அதை நடைமுறை படுத்துப்பவர்கள் மற்றும் கண்கானிப்பவர்கள் அரசாங்க ஊழியர்களே. அவர்களின் பலவீனம் லஞ்சம் பெறுவது. இதைத் தடுக்க முடிகின்றதா? அட லஞ்சம் வாங்கியவர்களைத் தான் என்ன செய்தார்கள்? ஆனால் எல்லோரும் அவ்வாறு இருப்பதில்லை. அதிலும் 'சுத்தமான கைகள்' இருப்பது சற்று பெருமைபடக்குரிய விஷயம் தான்.    

உதாரணமாக சமீபத்தில் நகை கடைக்கு ஒரு சதவீதம் (1%) கலால் வரி போட்டதற்கே எத்தனை நாட்கள் போராட்டம் செய்தார்கள்? ஏனென்றால் அதில் ஏதோ ஒரு கிடுக்கிப்பிடிஇருக்கின்றது என்று அர்த்தம். அப்படி ஏதாவது இப்போது நடந்ததா? அதாவது ஜி.எஸ்.டி வரி நடைமுறைக்குக் கொண்டு வந்தால் நம் நாட்டை எங்கோ கொண்டு போகப்போகிறது பாருங்கள் என்று மக்களை நம்ப வைப்பதற்கு பல முயற்சிகள் செய்து வருகிறார்கள். இது நாள் வரையில் அரசியல்வாதிகளுக்கு ஆதாயம் இல்லாமல் எந்த ஒரு திட்டமும் சட்டமும் நடைமுறைக்கு வராது என்பது எழுதம்படாத விதி. ஒருவேளை அப்படி வந்தாலும் அது அரசியல்வாதிக்கும், அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் சாதகமாகத் தான் இருக்கும்.      

புதுவரி போடுவதில் ஒரு வசதி இருக்கிறது. அதாவது போனதெல்லாம் போகட்டும். இதிலிருந்து சரியாக கட்டுங்கள் என்று சொல்வது போல் இருக்கின்றது. இதில் வரியைக் கட்டாதவர்கள், நாமம் போட்டதவர்கள் தான் பலன் அடைகிறார்கள். பயந்து வரியைக் கட்டியவர்களுக்கு  வழக்கம்போல்ஏமாளிகள்என்கிற பட்டம்!

தெறிக்க வைக்கும் வரி
மக்களிடம் ஓட்டு வாங்குவதற்காக கண்களை மூடிக்கொண்டு கடனைத் தள்ளுபடி செய்வதும் அல்லது சில சலுகை கொடுப்பதும், சிலவேளைகளில் வரி கட்டாத சிலருக்கு வரியைத் தள்ளுபடி செய்தும் அல்லது வரியைக் குறைப்பதும் வழக்கமாக நடைபெறுவது ஒன்று. அப்படி இருக்கும் போது இந்த ஜி.எஸ்.டி வரி நிலைத்து நிற்குமா? எல்லா மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சி சீராக இல்லாதபோது இந்த ஒரே வரியை எவ்வாறு பிரித்துக் கொடுப்பார்கள்? என்கிற கேள்வி மனதில் எழுகின்றதல்லவா? எந்த வரி நடைமுறைக்கு வந்தாலும் ஒவ்வொரு வருடமும் வரி ஏற்றமும், அரசு ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு மட்டும் தடைபடாது.          

இந்த நேரத்தில் நம் பழமொழி ஒன்று ஞாபகத்துக்கு வருகின்றது. அதாவது 'கூரையில் ஏறி கோழி பிடிக்கத் தெரியாதவன், வானத்தில் ஏறி வைகுண்டம் போவானாம்?' என்பது தான். இது நாள் வரை சுமார் பதினைந்திற்கும் மேற்பட்ட வரிகள் போட்டு கிழித்தாகி விட்டது. இப்போது இது தான் பாக்கி! என்று எண்ணத் தோன்றுகின்றது. இந்த வரி விதிப்பிற்குப் பிறகு பணக்காரர்களை பெரியப் பணக்காரர்களாக உருவாக்கும். ஆனால் நடுத்தரவர்கமும், ஏழைகளும் அதற்கு பலிகடாவாகப் போவதென்னமோ உண்மை. இது போதாது என்று சந்தடி சாக்கில் கல்வி வரி, சுத்தமான பாரதம் என்பது போன்று கொசுறு வரிகளையும் போடுவார்கள். இதனால் கறுப்புப் பணமும், வரி ஏய்ப்பும் பெருகுமே தவிர அவைகளை முற்றிலும் ஒழிக்கவோ அல்லது குறைப்பது என்பது கனவிலும் நடக்காதது ஒன்று.
  
காரணம், தினம் நிகழும் அரசியல் மாற்றம், சட்ட விதிகள் மாற்றம், நீதிபதிகள் மாற்றம், அரசு அதிகாரிகள் மாற்றம், தினம் தினம் காணாமல் போகும் வியாபாரிகள், நிறுவனங்கள், உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், சிறு, குறு, பெரும் சேவை நிறுவனங்கள், ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள் போன்றவர்கள். அதே சமயத்தில் தினம் தினம் புதிது புதிதாக முளைக்கும் வியாபாரிகள், நிறுவனங்கள், உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், சிறு, குறு, பெரும் சேவை நிறுவனங்கள், ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள் போன்றவர்கள். ஆனால் மாற்றமே இல்லாமல் யார் என்றால் வரியைச் செலுத்திவரும் மக்களே!

சரி, அப்படி காணாமல் போனவர்கள், மக்களிடம் வசூலித்த வரிப் பணம் அரசாங்கத்திற்குப் போய் சேருமாஅதுபோல பழைய வரிக்காக நிலுவையில் உள்ள வழக்குகள் என்னாவது? அவைகள் எல்லாம் எத்தனை ஆண்டுகள் இழுக்கும்? என்பதும், கடைசியில் என்னாவாகும்? என்பதும் நமக்கு அத்துப்படியாகத் தெரியும். இது தவிர, புதுப்புது வரிகள் விதிக்கும் போது அதுக்கான சட்ட புத்தகங்கள் இருக்கின்றதே, அந்த தடிமனைப் பார்த்தாலே தலை சற்ற வைக்கும். இந்த காலத்தில் ஒரு பக்கம் கூட பொறுமையாய் படிக்காத மக்களிடத்தில் இது தான் ஜி.எஸ்.டிக்கான புத்தகம்! என்று கொடுத்தால் அதை படித்துப் புரிந்து கொள்ள எத்தனை வருடமாகும்? என்று சற்று யோசியுங்கள். அப்படி இருக்கும் போது அவர்களால் எப்படி அதை நடைமுறைப்படுத்தி, சரியாக வரியை வசூலித்து அரசாங்கத்திற்குக் கட்ட முடியும்?

வரியா? அபராதமா?
நாடு முன்னேற்றம் அடைய தொழிலும், சேவையும் முக்கியம் தான். அதற்காக வரியை விதிப்பது நியாயம் தான். ஆனால் பேரும், புகழும், பணமும் இருக்கும் பலரிடம் வரி வசூல் செய்ய முடியாமல் அவர்களை விட்டுவிட்டு, அகப்படும் சிலரிடம் மட்டும் கிடுக்கிப்பிடி போட்டு வரி வசூல் செய்வது எந்த வகையில் நியாயம்? என்பது தான் கேள்வி. அப்படியானால் வரியானது எளியோரை பயமுறுத்தும் 'சாத்தானா?' என்று நினைக்கத் தோன்றுகின்றது. ஏனென்றால் வரி ஏய்ப்பு செய்வோர்களுக்கும், கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களுக்கும் யார் யார்? எந்தெந்த வகையில் உதவி செய்து வருகிறார்கள்? என்பதை பல ஊடகங்கள் தினம் தினம் எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தாலும் அதனால் எவ்வித பயனும் இல்லை என்பது தெரிகின்றதல்லவா?
இது நாள் எந்தெந்த பெயரில் என்னென்ன வரிகள் வதிக்கப்பட்டு இருக்கின்றன என்பதைப் பார்ப்போம். பொதுவாக காற்று இல்லாத இடம் இல்லைஎன்று சொல்வார்கள். இப்போது சற்று மாறி 'வரி கட்டாத வாழ்க்கை இல்லை' என்று சொல்லும் படி வைத்து விட்டார்கள்.

1.     The Madras General Sales Tax (MGST)
2.     Sales Tax (ST) – Selling the Goods
3.     Value Added Tax (VAT)
4.     Central Sales Tax (CST), Custom Duty & Octroi – From other area / State / Abroad
5.     Entertainment Tax Act (Cinema, Resort)
6.     Agriculture Income Tax Act
7.     Professional Tax  - For Business & Staff
8.     Luxuries Tax (Hotel)
9.     Commercial Tax
10.  Income Tax – Profit
11.  Service Tax (Any service)
12.  Edu. Cess
13.  Road Tax
14.  Swatch Bharath
15.  Property Tax
16.  Dividend Distribution Tax – For Dividend    
17.  Excise Duty ( Manufacturing Goods)
18.  Municipal & Fire Tax (Factory & Warehouse)  
19.  Turnover Tax or Minimum Alternate Tax (MAT)
20.  Cash Handling Tax ( Above Rs 25,000/= cash take from bank)
21.  Gift Tax (Birthday Gift)
22.  Wealth Tax (For wealth)
23.  Registration Fee (Purchase House)
24.  Sur-charge (Travel ) Bus  
25.  Interest & Penalty for timely unpaid Taxes   
26.  Water and Drainage Tax
இந்த பட்டியல் போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா? என்று சொல்வது போல் தோன்றுகின்றதல்லவா? இதிலிருந்து என்னத் தெரிகின்றதென்றால் எந்த ஒரு வரியை விதித்தாலும் தொலைநோக்குப் பார்வை இல்லாமல், அதன் பின் விளைவுகளை ஆராயாமல் கண்ணைமூடிக் கொண்டு அறிமுகப்படுத்தி, அரசாங்கம் அதை நடைமுறைப்படுத்துகின்றதோ என்றே நினைக்கத் தோன்றுகின்றது. அதை நிரூபிக்கும் வண்ணம் பல வரிகளைப் இதுவரைப் பார்த்தீர்கள்.   

இனியும் புதிய வரிகள் வருமா?
இப்போது எழுதி வைத்துக் கொள்ளுங்கள், இன்னும் பத்தாண்டுகளில் என்னென்ன வரிகள் புதிதாக போடுகிறார்கள் என்று பாருங்கள். இப்போது ஒரே நாடு, ஒரே வரிஎன்று சொல்கிறார்கள். பிறகு ஒரே உலகம், ஒரே வரிஎன்று முழங்கி வரியை கூட கொஞ்சம் கூட்டி வசூல் செய்வார்கள். அதாவது இந்தியாவை விட்டு வெளிநாடுகளுக்குச் சென்று யார் யார் பணம் சம்பாத்கிறார்களோ அவர்கள் இந்தியாவுக்கு ஒரு குறிப்பிட்ட சதவீதம் வரியாகச் செலுத்த வேண்டும் என்று சொன்னாலும் சொல்லுவார்கள். இல்லாவிட்டால் அந்த நாட்டில் வாழ முடியாது! என்று நெருக்கடி கொடுப்பார்கள். வரும் காலத்தில் என்ன நடக்கும் என்பது யாருக்குத் தான் தெரியும்?  

அப்படி இல்லாவிட்டால், "மாநில அரசாங்கம் எதிலும் தங்கள் இஷ்டம் போல் வரியைப் போடலாம். ஆனால் மத்திய அரசாங்கத்திற்கு அதில் பத்து சதவீதம் (10%) கட்டாயம் கொடுக்க வேண்டும்" என்று சொன்னாலும் அதற்கும் 'ஆமாம், ஆமாம்' என்று ஏற்றுக் கொள்ளும் அரசியல்வாதிகள் இருக்கும்போது நாட்டு மக்களாகிய நாம் என்ன செய்ய முடியும்? ஒன்று மட்டும் நிச்சயம். முழுமையாக வரி வசூல் செய்வது என்பது, ஆகாயத்தில் கோட்டைக் கட்டுவதற்குச் சமம். அதாவது அரசியல்வாதிகள், எந்த ஒரு சட்டமோ, திட்டமோ கொண்டு வந்தாலும் அதில் இருக்கும் பலன்கள் ஏழைகளுக்குச் சென்றடைவது சொற்பமே! ஏனென்றால் பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு பலமுகங்கள் இருக்கின்றன. சிலவேளைகளில் தங்களை ஏழைகளாகவும், பலவேளைகளில் பணக்காரர்களாகவும் காட்டிக் கொள்வார்கள். அது அரசு அளிக்கும் சலுகைகள் பொறுத்து தங்களை மாற்றிக் கொள்கிறார்கள் என்பதே உண்மை.

இது நாள் வரை வரியானது, பல தொழில்களை முடங்கிப் போவதற்கும், சாதாரண மற்றும் நடுத்தர மக்களின் சம்பாதியத்தை கரப்பதற்குமான வேலை தான் செய்து வந்துள்ளது. இனிமேலும் அதைத் தான் செய்ப்போகிறது என்கிற மனோபாவமே மக்கள் மனதில் ஓங்கியுள்ளது.  

'பில்லும்' வேண்டாம், வரியும் வேண்டாம்!
எங்கே உங்கள் மனதைத் தொட்டுச் சொல்லுங்கள்! நீங்கள் மருந்து மாத்திரை, நகைகள் வாங்கும்போதும், பெட்ரோல், டீசல், எண்ணெய் ஊற்றும் போதும், காய்கறி பழங்கள் வாங்கும்போதும் 'பில்' வாங்குகிறீர்களா? சரியான கட்டணம் கொடுத்து திரைப்படம் பார்க்கிறீர்களா? கல்விக் கட்டணத்திற்கு சரியான ரசீதைப் பெறுகிறீர்களா? தனியார் பேருந்தில் பயணம் செய்கின்றபோது சரியான கட்டணம் தான் கொடுக்கிறீர்களா? ஹோட்டலில் சாப்பிட்ட பிறகு 'பில்' வாங்குகிறீர்களாஒர்க் ஷாப் வேலை பார்த்ததற்கு 'பில்' வாங்குகிறீர்களா? இப்படி பலவற்றிற்கும் பில்என்கிற ஒன்று இல்லாத / பலர் கொடுக்காத போது, அரசாங்கம் எப்படி சரியாக வரி வசூல் செய்ய முடியும்? மேலும் எல்லாம் கணினிமயமான படியால் ஒரு சில நிமிடத்தில் வரியை ஏய்க்கும்படியான போலி பில்கள் எளிதில் தயாரிக்கலாம். அப்படி இருக்கும் போது பொருட்களை வாங்கப் போகும் மக்கள் எங்கே? யார்? வரி இல்லாமல் குறைந்த விலையில் பொருட்களை விற்கிறார்களோ அங்கு தான் வாங்குவார்கள். இதனால் அரசாங்கத்திற்க்குக் கிடைக்க வேண்டிய வரி கிடைக்காது அல்லது குறைவாகக் கிடைக்கும்.     

வரி வசூலிக்க எளிய வழி!
'வரி'யை வசூலிக்க எளிய வழி என்னவென்றால், எந்த ஒரு வரி இருந்தாலும் அதை சரி சமமாக நான்கு பாகமாகப் பிரிக்க வேண்டும். அவைகள் முறையே மத்திய அரசு, மாநில அரசு, வாங்குபவர்கள், விற்பவர்கள் ஆவார்கள். அந்த நால்வரும் வரியைச் செலுத்துவதற்கு தனித்தனியே வங்கிக் கணக்கு இருக்க வேண்டும். அதாவது பொருட்களுக்கான செலுத்தும் வரி நூறு சதம் (100%) என்று வைத்துக் கொண்டால் ஆளுக்கு இருபத்தைந்து சதவீதம் (25%). உதாரணமாக 'வரி' யானது இருபது சதவீதம் (20%) என்று வைத்துக் கொண்டால் ஆளுக்கு ஐந்து சதவீதம் (5%) பிரித்துக் கொள்ள வேண்டும். இது எதற்காக என்றால் ஒரு திட்டம் சரியாகச் செயல்பட வேண்டுமென்றால் மக்களுக்கும் ஏதாவது லாபம் கிடைத்தால் தான் அவர்கள் அதை சரியாகப் பின்பற்றுவார்கள். ஏனென்றால் 'வரி' யை மக்களிடத்தில் தான் வசூல் செய்ய வேண்டும். அவர்களின் ஒத்துழைப்பு நூறு சதம் இருந்தால் தான் திட்டம் வெற்றி பெறும். இத்தகைய வசூல் முறை வரிக்கு மட்டுமல்ல, நன்கொடை, வரிச் சலுகை மற்றும் கணக்கில் காட்ட முடியாத பணம் போன்றவற்றிற்கும் வரிவுபடுத்தலாம்.

மக்கள் ஓரிடத்தில் பொருளை வாங்கும் போதே பொருளுக்கான விலை தனியாகவும் அதற்கான 'வரி'யை நான்கு வங்கிக் கணக்கில் அதனதன் பங்குகளை உடனுக்குடன் சேர்த்துவிட வேண்டும். அது ஒரு சேமிப்பாக கணக்கில் (Savings Account) எடுத்துக் கொண்டு, வருட முடிவில் அவரவர் பங்குகளை எடுத்துக் கொள்ளலாம் என்கிற முறை இருந்தால் எப்படி இருக்கும்? மக்கள் தானாகவே எங்கே சரியான படி 'பில்' எங்கே கொடுகிறார்களோ அங்கே தான் பொருட்களை வாங்குவார்கள். ஏனென்றால் யாரும் அவர்களின் பங்கை இழக்கத் தயாராக இருக்க மாட்டார்கள் அல்லவா! இதனால் ஒருவர் வருடம் ஒன்றுக்கு சுமார் ஐய்யாயிரம் முதல் ஐம்பதினாயிரம் வரை சேமிக்கலாம்.       
         
அதோடு வியாபாரம் கூட்டிக் காட்டுவதற்கு பல போலி பில்கள் போட்டாலும், அதிகப்படியான பில்கள் போட்டாலும் வரி விகிதத்தில் ஐம்பது சதவீத வரியை கட்டாயம் கட்டியேத் தீர வேண்டும் என்கிற நிலை வரும்! ஒருவேளை பில்’ (Bill) தராமல் வியாபாரமோ அல்லது சேவையோ செய்தால் எல்லாருடைய பங்கையும் அவர்களே செலுத்த வேண்டும். ஆக பில்களை சரியானபடி போடுவதால் அந்த வரியின் பங்கை வைத்துக் கொண்டு, அவர்களுடைய அசல் வியாபாரத்தை தெரிந்து கொள்ளலாம். இதனால் வியாபாரத்தை செயற்கையாக கூட்டிக் காட்டவோ அல்லது குறைத்துக் காட்டவோ முடியாது. அது வங்கிக்கும், அரசாங்கத்திற்கும் சரியானக் கணக்கைக் காட்டும் புள்ளி விவரமாகவும் எடுத்துக் கொள்ளலாம். அது முக்கியமாகத் தேவை என்றே தெரிகின்றது. ஏனென்றால் சமீப வருடமாக நம்நாடு இதில் சாதனை செய்துள்ளது. உலகப் பொருளாதார வீழ்ச்சியால் நமக்கு பாதிப்பில்லை என்று ஒரு பக்கம் கூறுவதும், மறுபக்கத்தில் விலைவாசி ஏற்றத்தைக் கண்டு கொள்ளாமல் இருப்பதும், மானியத்தைக் குறைத்துக் கொண்டே வருதற்குப் பெயர் என்ன அர்த்தமோ? அவற்றிலிருந்து என்ன தெரிகின்றது, அவர்கள் கூறும் புள்ளி விவரங்கள் உண்மையல்ல என்று தானே நினைக்கத் தோன்றுகின்றது.    

சிலர் இருவகையான கணக்கை வைத்து இருப்பார்கள். வங்கியில் 'கடன்' வாங்க வேண்டுமென்றால் செயற்கையாக லாபத்தைக் கூட்டிக் காட்டுவார்கள். அப்போது தான் அதிக கடன் கிடைக்கும். அவர்களே வரியைக் கட்ட வேண்டுமென்றால் லாபத்தைக் குறைத்தோ அல்லது நஷ்டமோ காட்டுவார்கள். அதனால் எது உண்மையான கணக்கு? என்று சொல்ல முடியாது. ஆனால் இந்த முறையில் சரியான கணக்கு தெரிந்துவிடும். உடனுக்குடன் வரி வங்கிக் கணக்கில் சேர்ந்துவிடுவதால் 'வரி ஏய்ப்பு' என்கிற பேச்சுகே இடமில்லை. மேலும் அவர்கள் வியாபாரத்தையோ அல்லது சேவையையோ நிறுத்தினாலும் அதுநாள் வரை வசூலித்த வரி பற்றிய தலைவலி அரசாங்கத்திற்கு இல்லை. ஏனென்றால் வரிகள் உடனுக்குடன் சுடச்சுட வங்கியில் போய்விடுகின்றதல்லவா?   

மேலும் பல விதமான வரிகள் இருப்பதால் மக்களுக்கு எவ்வாறு விழிப்புணர்வு கிடைக்கும்? எதற்கு எவ்வளவு வரி என்று மக்களுக்கு தெரிய வாய்ப்பு இருக்கின்றதா? அதைவிடக் கொடுமை என்னவென்றால் நேற்றைக்கு ஒரு வரி இருந்திருக்கும். இன்றைக்கு அது மாறி இருக்கும். அது கூடவோ, குறையவோ இருக்கலாம். அவைகளை மக்கள் எவ்வாறு அறிந்து கொள்வார்கள்? சிலர் சந்தடி சாக்கில் வரிகள் இல்லாதவற்றிற்கும் வரியை நுழைத்து விடுகிறார்கள். உதாரணமாக சமீபத்தில் கேளிக்கை வரிஇல்லாத திரைப்படத்திற்கும் மக்கள் கேளிக்கை வரி செலுத்தியதாக சில ஊடகங்கள் எடுத்துக் காட்டியுள்ளது. அதே போல் நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது என்றும் சுட்டிக் காட்டியுள்ளது. அப்படியென்றால் மக்களிடம் பெற்ற அந்த அதிகமான பணத்தை எந்த கணக்கில் காட்டுவார்கள்? அந்த மாதிரியாகத் தான் கறுப்புப் பணமும், வரி ஏய்ப்பும் உருவாகின்றதுஆனால் சம பங்கு முறை இருந்தால் எவ்வளவு பணம் கொடுக்கின்றனரோ அதற்குத் தகுந்தாற் போல் வரியும் பிரியும். அதனால் அனைவருகும் நன்மை கிடைக்கும் அல்லவா?         

ஏற்கனவே எல்லாவிதமானக் கணக்கும் ஆன்-லைன் மூலம் நடக்கின்றபடியால் இதைச் செயல்படுத்துவதில் எவ்வித சிக்கலும் இருக்காது, தாமதமும் ஏற்படாது. இதனால் வரி ஏய்ப்பும், கறுப்புப் பணமும், கள்ளக் கணக்கும் தடுக்கலாம். இதனால் அரசின் வரி வசூல் இலக்கை எளிதாக எட்டலாம். நாளடைவில் வரி விகிதம் குறையலாம். விலைவாசியும் குறையலாம். இந்த வெளிப்படையும், நம்பகத் தன்மையும் இருக்கின்ற காரணத்தினால் அந்நிய முதலீட்டாளர்கள் பலர் இந்தியாவில் வியாபாரத்தைத் தொடங்க முன் வருவார்கள். இதனால் தொழில் பெருகும், வேலை வாய்ப்பு அதிகமாகும், மக்களின் வாழ்க்கை சிறக்கும், விரைவில் உலகமே வியக்கும் வண்ணம் நம்நாடு வல்லரசாக விளங்கும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதை உறுதியாகச் சொல்லலாம்.     

முடிவல்ல, கடைசியாக!  
இந்த முறையால் வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு உயருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றது. அது தவிர மக்களே வரியை நேரடியாக வரியைச் செலுத்துவதால் வரியைப் பற்றிய விழிப்புணர்வு உண்டாக்குவதோடு, அவர்களை முறையாக வழிகாட்டுவதாகவும் அமையும். மக்கள் நலனில் உண்மையாக அக்கறை இருந்தால் இத்தகைய வரி வசூல் முறையை இனிவரும் காலத்திலாவது அமுல்படுத்தினால் நாடும், வீடும் வளம் பெறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. பொறுத்து இருந்து என்ன நடக்கின்றது? என்பதை கவனிப்போம். இதைப் பற்றிய உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

**************************************************