Pages

Thursday 18 February 2016

5.4.2020 திருத்திய கடகதேசமும் மேசகிரியும் (குறுநாவல்) - நிறைவு பாகம் :4

5.4.2020 திருத்திய கடகதேசமும் மேசகிரியும்  (குறுநாவல்) 
அல்லது
மிதுனமதி (குறுநாவல்)
நிறைவு பாகம் :4 
மதுரை கு.கி.கங்காதரன்


குறிப்பு: மேலே காட்டப்பட்ட படங்கள், வாசகர்கள் படிக்கும்போது
ஞாபகம் வைத்துக்கொள்ள மட்டுமே -- நன்றி படங்களுக்காக
நிறைவு பாகம் :4 

"மிதுனமதி, நீ இதுவரையில் நடந்த சம்பவங்களையும் இனிமேல்  வரப்போகும்  ஆபத்தையும் பற்றிக் கூறினாய். இப்போது அதனை முறியடிக்கும் வழியை நான் கூறுகிறேன். ஆனால் அதற்கு உன்னிடமிருந்து முழு ஒத்துழைப்பையும் எதையும் செய்யும் துணிச்சலும் எதிர்பார்க்கிறேன். நான் இப்போது போடும் திட்டத்தால் உனக்கு அவப்பெயரும் அவமானமும் ஏன் உயிருக்குக் கூட ஆபத்து ஏற்படலாம். அதையெல்லாம் தாங்கிக்கொள்ளும் மனோதைரியம் கட்டாயம் வேண்டும்"
"மெய்க்காப்பாளரே! நீங்கள் சொல்வதை நான் ஆணையாக ஏற்றுக்கொண்டு செய்கிறேன். நம் இருநாட்டு மக்களின் நலனுக்காக நான் எது வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறேன். இது உறுதி!" என்று படபடப்பாக  தன் வீரத்தைப் பேச்சில் காட்டினாள். மேலும் அவள் "மேற்கொண்டு நாம் நடக்க வேண்டியவற்றைத் தாமதப்படுத்தாமல் செய்து முடிக்க வேண்டும்" என்று விரைவுபடுத்தினாள்.

"அப்படியானால் சரி. இதுதான் என் திட்டம்" என்று இரகசியமாகத்  தனுசுமல்லர்,  மிதுனமதியின் காதில் சொல்ல அதைக் கேட்டவுடன் அவள் சற்று பயம் கலந்த நடுக்கம் கொள்வதைக் கவனித்த தனுசுமல்லர் 

"இதற்கே இப்படிப் பயந்தால் போகப்போக இதற்குப் பிறகு ஏற்படும் அதிபயங்கரத்தை எவ்வாறுச் சமாளிக்கப்போகிறாயோ?"

"நீங்கள் நினைப்பது தவறு. நான் எதற்கும் பயப்படவில்லை. உங்களுக்குள் இருக்கும் இராஜதந்திரத்தை நினைத்துப் பார்த்தேன். அவ்வளவு தான்"

"முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும். தந்திரத்தைத் தந்திரத்தால் தான் வெற்றி கொள்ள முடியும். நான் சொல்லியபடி ..."

"நான் இப்போதே அதற்குத் தயாராகிவிட்டேன்"

"ஆகட்டும் புறப்படு. இப்போது உன்னை யாரும் அடையாளம் தெரியாதவாறு சற்றே மாறுவேடத்தில் ஒரு பெண் கைதியாக அரசவைக்கு அழைத்துச் செல்லப் போகிறேன். அதற்கு முன் உனது இதயத்தை இரும்பாக்கிக் கொள். இனி உனது பெயர் மிதுனமதி இல்லை. மிதுனசுந்தரி, சரியா?"  

'சரி' என்று தலையை ஆட்டியவாறு தனுசுமல்லரின் சொல்லைத் தட்டாமல் அவர் பின்னே ஒரு கைதியாக நடக்கலானாள்.

அரசவையில் பலரும் கூடியிருக்கும் வேளையில் அனைவரின் முன்பாக ஒரு கைதியாக மிதுனமதியை தனுசுமல்லர் அழைத்துவர, அவையில் உள்ளவர்கள் அக்காட்சியைப்  பார்த்துப்  பரபரப்பு அடைந்தனர். 

இளவரசர் துலாவர்மர், எதையும் அனுமானிக்க முடியாதவராய் அவளைப் பார்த்துப் பரிதாபப்பட்டார்.  

முக்கியமாகச் சேனாதிபதி சிம்மசேனரின் விழிப்பிதுங்கிப் போயிற்று.  ஒருவேளை தங்களது திட்டம் நமது மெய்க்காப்பாளருக்குத் தெரிந்திருக்குமோ? என்கிறச் சந்தேகம் எழுந்தது. ஆனால் அப்படித் தெரிந்திருப்பதற்கு வாய்ப்பில்லை என்று உறுதியாக நம்பினார். அந்த எண்ணத்தையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு மிதுனமதியான மிதுனசுந்தரியைப் பற்றிய ஆயிரம் சிந்தனைகள் அவரது மனதில் ஓடியது. இவள் யார்? எப்படி இவர் கையில் சிக்கினாள்?  என்கிற கேள்வியோடு, அழகும் கம்பீரமும் கொண்ட ஒரு பெண்ணை தன் வாழ்நாளில்   முதன்முதலாக இப்போதுதான் பார்க்கிறார். 

"மெய்க்காப்பாளரே, ஒரு பெண்ணைக் கைதியாக அழைத்துக் கொண்டு வந்துள்ளீர்களே, அப்படி அவள் செய்த குற்றம் தான் என்ன?

"இளவரசே, நான் சொல்லப்போகும் செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியைத் தரும். இருப்பினும் சொல்கிறேன் கேளுங்கள். நம் எதிரி நாடான மேஷகிரியைச் சேர்ந்த இப்பெண்ணின் பெயர்  மிதுனசுந்தரி. ஒற்றர்களின் மூலம் எனக்குக் கிடைத்த செய்தி  யாதென்றால்,  தங்களைக் கொலைச் செய்வதற்காக இப்பெண் இங்கு வந்துள்ளார் என்பதை அறிந்துகொண்டேன். எப்படியோ என் கண்களில் அகப்பட்டுவிட்டாள். இப்பெண்ணால் இந்த கடகதேசத்திற்கு ஆபத்து ஏற்படலாம்  என்று தெரிகிறது. ஆகவே தாங்கள்தான் இப்பெண்ணை நன்கு விசாரித்து உடனடியாகத் தகுந்த தண்டனையைக் கொடுக்கவேண்டுகிறேன்" என்று கர்ஜிக்க அங்குள்ள அனைவரும் 'இவளுக்கு மரணதண்டனை கொடுங்கள்' என்று சலசலப்புடன் கூச்சலிட்டனர்.

அப்போது மிதுனமதி ஒருகணம் அவமானமடைந்தாலும் தன் நாட்டை காப்பாற்றவும்  இளவரசி  மீனாம்பிகையைக் கண்டுபிடிக்கவும்  மனதில் வைராக்கியம் கொண்டு  நடப்பவைகளைச்  சகித்துக் கொண்டாள்.

"அமைதி, அமைதி" என்று இளவரசர் துலாவர்மர் கூறியவுடன் அரசவை அமைதியானது.

"பெண்ணே, எமது மெய்க்காப்பாளர் தனுசுமல்லர் சொன்னதை நீ மறுக்கிறாயா?  அல்லது ஏற்கிறாயா?"

"அவர் சொன்னது எல்லாம் உண்மை. உங்களது மூதாதையர்களால் எங்களது குடும்பம் அழிந்துவிட்டது. அதற்குப் பழிதீர்க்க உங்களைக் கொல்வதற்காகவே, இதுநாள் வரையில் என் உயிரைத் தக்கவைத்துக் கொண்டதோடு இவ்வளவு வருடங்கள் காத்திருந்தேன். நேரம் கைகூடும் வேளையில் உங்கள் மெய்க்காப்பாளர் சாமர்த்தியமாக அதனைத் தடுத்துவிட்டார். நீங்கள் எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் அதனை நான் ஏற்றுக்கொள்கிறேன்" என்று துணிவுடன் பதிலளித்தாள்.

அவள் பேசியதைக் கேட்டவுடன் சேனாதிபதி சிம்மசேனருக்கு ஒரு புது யோசனைப் பிறந்தது. 'ஆகா, என்  திட்டத்தைச்  செய்து முடிப்பதற்கு  இப்படிப்பட்டப் பெண்ணையல்லவாத் தேடிக் கொண்டிருந்தேன். இவள் மட்டும் என் கையில் கிடைத்துவிட்டால், இவள் விருப்பப்படி இளவரசரைக் கொல்வதற்கு நான் உதவி செய்துவிட்டால், பிறகு இந்நாட்டு அரசனாக நான் முடிசூட்டிக் கொள்வதற்கு எளிதாக  இருக்குமல்லவா? அதன் பின் பாதாள அறையில் இருக்கும் இளவரசியை எப்படியும் இவள் மூலமாகவே மேஷகிரியின் மதிமந்திரி விருச்சிகளுக்குத் திருமணம் செய்து கொடுத்துவிட்டால்... பிறகென்ன மேஷகிரியின் அரசர் ரிஷபவேந்தரைக் கொல்வது சுலபமல்லவா! அப்புறம் திட்டமிட்டபடி  மதிமந்திரி  விருச்சிகரை  அந்நாட்டு அரசராக அரியணையில் அமர்த்திவிட்டால் யார், என்ன கேட்கமுடியும்?' என்கிற ஒருகணம் கற்பனையில் மிதந்தார். ம்.. நினைப்பதெல்லாம் நடந்திடவாப் போகிறது' என்று பெருமூச்சும்  விட்டார்.       

"பெண்ணே,  உனது வீரத்தைக் கண்டு  நான் பூரிப்படைகிறேன். என்னதான் நியாயமாக உணர்ச்சிகரமாகப் பேசினாலும் நீ சொல்லும் காரணம் எனக்குச் சரியாகப்படவில்லை. உனக்கு வேறு ஓர் உள்நோக்கம் இருக்கின்றது என்று நம்புகிறேன். ஒருவேளை உனக்கு நாங்கள்  தவறாகத்  தண்டனை கொடுத்துவிட்டால் என் மனம் புண்படுவதோடு இம்மக்கள் வெகுண்டு போய்விடுவார்கள்.  அது மட்டுமா?  இதையே எதிரிகள், தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு இந்நாட்டு மக்களைத் தூண்டிவிட்டு கலவரத்தை உண்டுபண்ணி இதனைப் பெரும் பிரச்சனையாக மாற்றிவிடுவார்கள்.  உனது தண்டனை அதுவரைக்கும் போய்விடக்கூடாது என்று கூறியதோடு,  இளவரசர்  துலாவர்மர்   சபையோர்களைப் பார்த்து இப்பெண்ணின் குற்றம் நிரூபணமாகும் வரை நமது சேனாதிபதி  சிம்மசேனர் கண்காணிப்பில் இவள் இருக்கட்டும். என்ன சொல்கிறீர்கள்  இராஜகுருவே"  என்று  மகரகுருவிடம்  கேட்க அவர் மட்டுமில்லாது அனைவரும் அதற்கு இசைந்தனர்”.

சிம்மசேனருக்குப் பழம் நழுவித் தேனில் விழுந்தது போல் துள்ளினார். ஏனெனில் 'எதிரிக்கு எதிரி நண்பன்  என்பது விதியல்லவா!  இந்த  மிதுனமதியான மிதுனசுந்தரியைக் கொண்டு தான் சற்றுமுன் நினைத்த காரியத்தை உடனே செய்து முடிக்கத் துடித்தார்.

வீரர்கள், அவளைக் கைதிக்கோலத்துடன் அழைத்து வருவதைப் பார்த்த சிம்மசேனர் "வீரர்களே முதலில் இவளை விடுவித்து சுதந்திரமாக என்னோடு வரவிடுங்கள்" என்று அவர் தனது மாளிகையினுள் இருக்கும் பாதாள அறைக்கு அழைத்துச் சென்றார்.  

நடப்பவைகளைப் பார்த்து ஒருவிதமான மிரட்சியடைந்தாள்.

"ஏன் மிதுனசுந்தரி,  இவ்வளவு ஆச்சரியமாகப் பார்க்கிறாய்? இன்னொரு அதிசயத்தையும் நான் காட்டுகிறேன். வா.." என்று  அங்குள்ளச்  சிறையில்  வைத்திருந்த  இளவரசி மீனாம்பிகையைக் காட்டினர், அவரைப் பார்த்தபோது  'தான் ஊகித்தது எல்லாம் சரிதான்'  என்கிற முடிவுக்கு வந்தாள்.  அதேவேளையில்  இளவரசியை எப்படிக் காப்பாற்றுவது? என்று தவித்தாள். 
  
சிறையில் இருக்கும் இளவரசி மீனாம்பிகை, தனது தோழி மிதுனமதியை அடையாளம் கண்ட மாத்திரத்தில்  நடந்தவற்றை  அறியாமல் "துரோகி!  நீயுமா?... இவர்களோடு சேர்ந்து  என்னைப்  பழிவாங்கவும்  என் நாட்டைக் காட்டிக்கொடுக்கவும் துணிந்துவிட்டாய்? எந்தப் புற்றில் எந்த பாம்பு இருக்கும் என்பதை அறிந்திடாமல் வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பி ஏமாந்துவிட்டேன்"  என்று  புலம்பித் தள்ளினாள். 

இந்தக் கடுமையான குற்றச்சாட்டையும் மிதுனமதி புன்சிரிப்போடு ஏற்றுக்கொண்டாள்.   

சிம்மசேனர் ஒருகணம் குழம்பிப்போய் "மிதுனசுந்தரி, இவரை உனக்குத் தெரியுமா? உன்னைப் பார்த்து ஏதேதோ சொல்கிறார்களே"

உணர்ச்சிகளை உடனே கட்டுப்படுத்திக்கொண்டு, மிகச் சாதாரணமாக ஏதும் தெரியாதவாறு "இவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது? யார் இவர்? ஒருவேளை சிறையில் இருப்பதால் மூளை குழம்பிப்போய்ப் பேசுகிறார்கள் என்று நினைக்கிறேன்" 
               
"அ.. ஆமாம். அப்படித்தான் இருக்கும்" என்று சமாதானமடைந்தார்.     

எங்கே சிம்மசேனர் தன்னைப் பற்றி மேலும் ஏதாவது கேட்டுவிடுவாரோ என்று நினைத்து  மிதுனமதியான  மிதுனசுந்தரி, சற்று  ஏற்றமான குரலில் "சேனாதிபதியாரே,  என்னை ஏன் இங்கு அழைத்து வந்தீர்கள். ஒரு கைதியான எனக்கு இங்கு என்ன வேலை? கோ .. இப்பெண்ணைப் போல் என்னையும் இந்தச் சிறையில் அடைக்கப் போகிறீர்களா?"

"சேச்..சே.. உன் திட்டத்திற்கு உதவி செய்யவே இங்கு அழைத்து வந்துள்ளேன். இங்கு நீ சுதந்திரமாக இருக்கலாம். இப்போது நீ ஓய்வெடுத்துக் கொள். பிறகு, இப்பெண்ணின் மீது எதற்கும் ஒரு கண் கொண்டு பார்த்துக் கொள். ஏனென்றால் உனது திட்டத்திற்கு இவர் கூட உதவலாம்.  எல்லாவற்றையும்  விவரமாகச் சொல்கிறேன்" என்று சிம்மசேனர் அவளை அனுப்பி வைத்தார்.  

மேசகிரியில் 

மதிமந்திரி  விருச்சிகர்  அரசரவையில்  இவ்வாறாக ஒரு புதுக்கதையைக் கட்டிவிட்டு  அனைவரையும் நம்பவைத்தார். 

"அரசே, அமாவாசை இரவு அன்று கன்னித்தேவிக் கோவிலின் முன் நின்ற சிலர் கண் இமைக்கும் நேரத்தில் தன்னையும் தன்வீரர்களையும் தாக்கிவிட்டு,  பூஜையை  முடித்திட்டு  வந்த இளவரசி  மீனாம்பிகையையும்  மிதுனமதியையும்  அவர்கள் கடத்திச் சென்றுவிட்டனர்" என்று புழுகினார். 

அதோடு நிற்காமல் "அரசே, தங்களையும் நம்நாட்டு  மக்களையும்  மதிக்காமல்  வரும் பௌணர்மியன்று  கடகதேசத்து   மக்கள்  மட்டும்  கலந்து  கொள்ளும் வகையில் ஆதிபகவன் கோவிலுக்குக்  கும்பாபிசேகமும்   தங்கத்தேர்   ஊர்வலத்திற்கும் ஏற்பாடு செய்துவருகிறார்கள் என்கிற செய்தியையும் கேள்விப்பட்டேன்" என்கிற ஒரு பொய்ச்செய்தியை நா கூசாமல் சொல்லிமுடித்தார். 

அதனைக்  கேட்டுப்   பொறுக்க  முடியாமல்  "மதிமந்திரியாரே!   கோழைகள்!   இரவுநேரத்தில் கேவலம்  பெண்களிடத்திலா  அவர்களின் வீரத்தைக் காட்டுவது! அவர்களைச்  சும்மா விடக்கூடாது. தக்கப்பாடம் கற்பித்தே தீரவேண்டும். இவ்வேளையில் தாங்கள் நல்ல யோசனை கூறவேண்டுகிறேன்" என்று அரசர் ரிசபவேந்தர் மதிமந்திரியாரிடம் வேண்டிக்கொண்டார்.

எரிகின்ற தீயில் எண்ணெய் விடுவதற்கு இதுதான்  நல்ல சந்தர்ப்பம்,  அதை  மதிமந்திரி  விருச்சிகருக்குச் சொல்லியாத்  தரவேண்டும்?  இந்தச் சந்தர்ப்பத்தைத்தானே அவர்  எதிர்பார்த்து  காத்திருந்தார்.

"அரசே!  யாவையும் நினைக்கும்போது நெஞ்சம்  பதறுகின்றது.   பழிவாங்க   மனம்   துடிக்கின்றது. போர்முரசு கொட்ட உத்தரவு கொடுங்கள்" என்று குமுறினார்.

இப்போது அவர் தன் நாட்டின் மீது அதிக அக்கறையுள்ளவராகக் கச்சிதமாக நடித்தார்.

"மதிமந்திரியாரே,   பொறுங்கள்.   பொறுத்தார்  பூமியாள்வார்.   எதுவும் நிச்சயமாகத் தெரியாதவரைக்கும்  நாம்  எந்த  ஒரு முடிவுக்கும் வந்துவிடக் கூடாது. ஆனால் எதற்கும் நாம் போருக்குத் தயாராக இருக்கவேண்டும். அதற்கு முதற்கட்டமாக ஆண்டுதோறும் நடைபெறும் சிறந்த வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் போட்டியை நடத்தி அதில் தேர்வாகும் வீரர்களை நமது படையில் சேர்த்து அவர்களை எப்போது வேண்டுமானாலும் போருக்குத் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். அதோடு வழக்கம்போல் வெற்றிபெறும் ஒரு சிறந்த வீரனை என்னுடன் தனியாகக் கலந்து கொள்ளும் சிறப்பு விருந்திற்கும்  ஏற்பாடு செய்யவேண்டும்"  என்று ஆணையிட  "அப்படியே  ஆகட்டும் அரசே" என்று கூறி விடைபெற்றார் மதிமந்திரி விருச்சிகர். இவ்வேளையில் 'இனி நடக்கப்போகும் போரினால்  தனது திட்டம் விரைவாக நிறைவேறப் போகிறது' என்று மகிழ்ச்சியில் துள்ளினார்.  

போட்டித்திடல்  கவர்ச்சியாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.  மேசகிரி   மக்கள் வீரத்திற்குச் சோடை போகிறவர்கள் கிடையாது என்பதை நிரூபிக்கும்வண்ணம் போட்டியைக் கண்டுகளிக்க வந்திருக்கும் கூட்டத்திற்கு இணையாக வீரர்களும் இருந்தனர். அக்கூட்டத்தில் தனுசுமல்லர், ‘தனுசுசுந்தரர் என்ற பெயரில் மக்களோடு மக்களாக அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.

போட்டிகள்  ஆரம்பமாயின. மக்கள் தங்கள்  ஆரவாரங்களைக்  கர ஒலிகளாலும்   அதிகச் சப்தத்தின்  மூலமாகவும்   வெளிப்படுத்தினர்.  அப்போட்டித்திடலில் வீரர்கள் மலைகள் உயிர்பெற்று மோதிக்கொண்டது போல் இருந்தது . அனைத்துப் போட்டிகளும் நடந்து ஒரு முடிவுக்கு வந்தது.  வழக்கம்போல் எப்போதும் வெற்றிபெறும் வீரனே இம்முறையும் வெற்றி பெற்றான். அதைப் பார்த்த மேசகிரி அரசர் ரிசபவேந்தர், "இவ்வீரனை வெல்ல இக்கூட்டத்தில் யாரேனும்   இருக்கிறீர்களா?"  என்று அறைகூவல் விடுக்க,  இதுதான்  தக்க சமயம்  என்று தனுசுமல்லர்   "ஏன் இல்லை?   நான் இருக்கிறேன்!" என்று கர்ஜிக்க  அரசர் முதற்கொண்டு அனைவரும் அவரை வியப்புடன் பார்த்தனர்.  அந்தச் சவாலை ஏற்றுக்கொண்ட வீரன், தனுசுமல்லரின் வீரத்திற்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் கீழே சரிந்தான். மிக்க  மகிழ்ச்சியடைந்த ரிசபவேந்தர்  "வீரனே  உன் வீரம்  என்னை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. உன் பெயரென்ன? உனக்கு எந்த ஊர்?" என்று கேள்விகளை அடுக்கினார்.

"என் பெயர் தனுசுசுந்தரர், எனக்கென்று நிரந்தரமான எந்த ஓர் ஊரும் இல்லை" என்று கூறியதை நம்பினார்.  

"மிக்க மகிழ்ச்சி. இன்றுமுதல் இந்த ஊரிலேயேத் தங்கலாம். இன்று நீ எனது சிறப்பு விருந்தாளி. எனது அரண்மனையில் உனக்குத் தனியாக ராஜவிருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளேன். அதில் கலந்துகொள்ள அழைக்கிறேன்"  என்று கேட்டுக்கொள்ள  "நான் அதனைக்  கௌரவமாகக் கருதுகிறேன்" என்று பதிலளித்தார் தனுசுமல்லர்.

அன்றைய  இரவு விருந்தில் அரசர்  ரிஷபவேந்தரும்  தனுசுமல்லரும் சந்தித்தனர். நேரத்தை வீணாக்காமல்  வந்த காரணத்தைச் சொல்லி  முடித்துவிடுவதில் குறியாக இருந்தார்  தனுசுமல்லர்.  நேரடியாக விசயத்திற்கு வந்தார்.  "அரசே, இவ்விருந்தில் கலந்துகொள்வதில்  எனக்கு மிக்க  மகிழ்ச்சி.   இருந்தாலும் முதலில்  தாங்கள் என்னை   மன்னிக்கவேண்டும்.  இந்தச்  சந்திப்புக்கு முக்கியக் காரணகர்த்தா யாரென்றால் உங்கள் இளவரசி மீனாம்பிகையின் தோழி மிதுனமதி. அவளின் ஆற்றலும் அறிவும் தியாகமும் நாட்டுப்பற்றும் என்னை மெய்சிலிர்க்க வைத்தன"  என்று அவளின் பெருமையினைப் பேச ரிசபவேந்தரின் முகம் பிரகாசமடைந்தது. கூடவே ஒரு குழப்பமும் தோன்றியது.

"அப்படியென்றால் நீங்கள்...."

தன்  வேடத்தைக்  களைத்து   "நான் தான் கடகதேசத்தின்   இளவரசர்  துலாவர்மரின்  மெய்க்காப்பாளர்   தனுசுமல்லர்" என்று சொன்னவுடன்

"..  நீங்கள்தானா அவர்? இளவரசி மீனாம்பிகையைப் பற்றி..." எனக் கேட்டதுதான் தாமதம் "இளவரசியார் சேனாதிபதி  சிம்மசேனரின்  கண்காணிப்பிலும்   மிதுனமதி கவனிப்பிலும்  பத்திரமாக இருக்கிறார்"

"அப்படியென்றால் நீங்கள் எதற்காக இந்த வேடத்தில் ...."

"அரசே, நம் இருநாட்டுக்கும் ஆபத்து சூழ்ந்துள்ளது" என்று நடந்தவற்றையும் அதோடு   இருநாட்டில் நடக்கும் பின்னனிச் சதியையும் எடுத்துக் கூறினார் தனுசுமல்லர்.

இதனைக் கேட்ட ரிஷபவேந்தரின் முகம் கோபத்தில் சிவந்தது. 

"தனுசுமல்லரே,  இப்போது  இளவரசியைப்  பற்றிய எனது  கவலை மறைந்தாலும் நாட்டைப்பற்றியக் கவலை அதிகமாகிவிட்டது. இப்போது உடனடியாக என்ன செய்யவேண்டுமென்று சொல்லுங்கள்"

"அரசே, இதோடு தங்களுக்கு மற்றொரு பொறுப்பும் சேர்ந்துவிட்டது!"

"என்ன தனுசுமல்லரே புதிர்போடுகிறீர்கள்?" 

"ஆம் அரசே" என்று  தன் குருவான மகரகுரு  சொன்ன அடையாளமான,  வலதுகாலில் உள்ள மூன்று மச்சத்திற்கு உரியவரான அவருடைய  புதல்வியே   தனது  இளவரசர்  துலாவர்மருக்குத்  தகுந்த மணப்பெண் என்று கூற மகிழ்ச்சியின் உச்சத்தை அடைந்தார். அடுத்து என்ன  செய்வதென்றறியாது  திகைத்தார். 

மீண்டும் இயல்பு நிலைக்கு அரசர் திரும்ப அவசரமாய் அவர் காதில்  தனுசுமல்லர் ஏதோ சொன்னார்.  அதனைக் கேட்டுத் தன்னையறியாமல் "ஆ..." வென்று அலறினார்.

"அரசே,  பாம்பின் கால்தடம் தெரிந்துகொள்ளவேண்டுமென்றால் ஒரு பாம்பால்  மட்டுமே எளிதாகத் தெரிந்துகொள்ள முடியும். ஆகவே என்னையும் ஒரு பாம்பாக மாற்றுங்கள். என் தேசத்தில் உலாவும் பாம்பைக் கொல்ல! அதாவது சிம்மசேனரை கொல்ல இப்போதே உத்தரவு தாருங்கள்! பிறகு நடப்பது எல்லாம் நன்மையில் முடியும்" என்றார் ஆவேசமாக.

"மெய்க்காப்பாளரே, எனக்கு எல்லாம் புரிந்துவிட்டது.  இப்போது பாருங்கள் நான் என்ன செய்கிறேன் என்று" தனது  இருகைகளைத்தட்டி "யாரங்கே! உடனே மதிமந்திரி விருச்சிகரை அழைத்து வாருங்கள்" என்று ஆணையிட உடனே அரசர் முன் நின்றார். 

"அரசே, தாங்கள் அழைத்த காரணம் யாதாயினும் அதை சிரமேற்று முடிக்கிறேன்"

"ஒன்றுமில்லை  மதிமந்திரியாரே,  நம் இளவரசியையும்  அவளது தோழியையும் நம் எதிரியான கடகதேசத்து இளவரசர்  துலாவர்மர் தான் கடத்தியிருக்க வேண்டும் என்று  நான் சந்தேகிக்கிறேன். அங்கு எது நடந்தாலும் அந்நாட்டுச் சேனாதிபதி சிம்மசேனருக்குத் தெரியாமல் இருக்காது. அவரை இங்குக் கொண்டுவந்தால் நடந்தது என்னவென்று தெரிந்துவிடும். ஆகவே எது எப்படி இருந்தாலும், யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை.  நாளைக்குள் அவரை  இவ்வீரன்  தனுசு சுந்தரர் மூலம் சிறைபிடித்து இங்குக் கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென்று ஆணையிடுகிறேன்.

அதைக் கேட்ட விருச்சிகரின் இரத்தம் உறைந்தது. ஒரு காலடி கூட எடுத்துவைக்க முடியாதபடிச் சிலைபோல் நின்றார். 'தன் திட்டம் அரசருக்குத் தெரிந்திருக்குமோ' என்று குழப்பத்தில் ஆழ்ந்தார். ' தன் விணை தன்னைச் சுடும்' 'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்கிற பழமொழிகள் அவர் நினைவிற்கு வந்துபோயின.

எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஒப்புக்காக அவர் வாயளவில் "ஆகட்டும் அரசே, இதோ அந்த காரியத்தை நாளைக்குள் முடித்து அந்த வெற்றிச் செய்தியோடு வருகிறேன்" என்று சொல்லி விடைபெற்றார்.

உடனே அவர் மனதில் 'இச்செய்தியை   கடகதேசத்துச் சேனாதிபதி  சிம்மசேனரிடம்  சொல்லி  எச்சரிக்கைச் செய்ய வேண்டும் என்பதற்காக தனுசு சுந்தரர் வேடத்தில் இருக்கும்  தனுசுமல்லரை  அரண்மனையில்  சற்று ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு எவர் கண்ணிலும் படாமல் வழக்கமாக வயோதிகர் வேடமிட்டு சிம்மசேனரை சந்திக்க விரைந்தார். 

பதற்றமாய் வரும் விருசசிகரின் வரவை அவர் சற்றும் எதிர்பார்க்காதவராய் "மதிமந்திரியாரே,  நல்லவேளை வந்தீர்கள்! உங்களை நான் இன்று சந்திக்கவேண்டுமென்று இருந்தேன். அதற்குள் நீங்கள் முந்திக்கொண்டீர்கள்" என்றார்  சேனாதிபதி சிம்மசேனர். 

விருச்சிகரோ அதைக் காதில் வாங்கிக் கொண்டு "முதலில் இளவரசி மீனாம்பிகை எங்கு இருக்கிறார்  என்பதைச் சொல்?"

"அவர் என் மாளிகையில் இருக்கும் பாதாள அறையில் பாதுகாப்பாக இருக்கிறார்"

"அப்பாடா" என்று மூச்சு விட்டார் விருச்சிகர். "அதிருக்கட்டும் இன்று எதற்காக  என்னைச் சந்திக்க வேண்டுமென்று எண்ணினாய்?"

"உங்களிடத்தில் நான் முன்னமே சொல்லியிருந்தேனே வீரப்பெண் மிதுனசுந்தரி!"

"ஆமாம், உன் கண்காணிப்பில் இருப்பவள் தானே! நீயும் கூட அவளையும் நம் திட்டத்திற்கு உபயோகித்து கொள்ளலாம் என்று கூறியிருந்தாயே, அதற்கென்ன இப்போது?"

"அவளுடைய நோக்கமும் நம் இளவரசர் துலாவர்மரைக் கொல்லவேண்டுமென்பது தான்"

"அதற்கு"

"அவளைக்கொண்டு முதலில் அந்தக் காரியத்தை முடித்துவிடுவோம், பிறகு எல்லாமே நம் திட்டப்படி நடத்திடலாம்"

"அதுவும் நல்ல யோசனை தான். அதன்படி செய்து முடிப்போம். அதற்கு முன் நான் எந்த செய்தியோடு இங்கு வந்திருக்கிறேன் என்று சொன்னால் நீ ரொம்பவும் ஆச்சரியப்படுவாய்"

"அப்படியென்னச் செய்தி?"

"எனது அரசர்  ரிஷபவேந்தர்  நம்  நட்பைப் பற்றித் தெரியாமல் உன்னைச் சிறைபிடித்து வரச்சொல்லியிருக்கிறார்" என்று நடந்தனவற்றை  விலாவாரியாகச்  சொல்லி முடித்தார் மதிமந்திரி விருசசிகர்.      

"மதிமந்திரியாரே, நாம் இப்போது என்ன செய்ய வேண்டும்? எனக்குச் சற்று பயமாக இருக்கின்றது" 

"சிம்மசேனா, வீண் பயம் வேண்டாம். அறிவாளிகளுக்கு எதுவுமே தடையாய் இருக்காது. நமது அடுத்த திட்டம் என்னவென்றால் …"

"என்ன.. என்ன.. சீக்கிரம் சொல்லுங்கள் மதிமந்திரியாரே. திட்டங்கள் போட்டே நாம் அரசர்களாகும் காலம் தள்ளி போய்க்கொண்டே இருக்கின்றது" என்று சலித்துக் கொண்டார் சிம்மசேனர்.

"அவசரம் கூடாது. இச்சமயம்தான் நிதானம் தேவை. அதாவது என்னிடத்தில் இருக்கும்   தனுசு  சுந்தரர் மூலமாக உங்களுக்கு ஆபத்தும்,  உங்கள்  கண்காணிப்பில்  இருக்கும் மிதுனசுந்தரியால் இளவரசர்  துலாவர்மருக்கும் ஆபத்து இருக்கின்றதல்லவா. அவர்கள் இருவரின் மூலம் நமக்கு வந்திருக்கும் ஆபத்தை, எய்தவர்களின் பக்கமே திருப்பிவிட்டால் ..."

"தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் மதிமந்திரியாரே?"

"புரியவில்லை. ஒரே கல்லில் இரு மாங்கனிகள். அதாவது அவர்கள் இருவரும் நமக்குக் கீழே இருப்பதால்  நம் பேச்சைத்தான் கேட்பார்கள். மிதுனசுந்தரி ஏற்கனவே இளவரசர்  துலாவர்மரை கொல்லவேண்டும் என்று லட்சியமுள்ளவள். நீ சொன்னதுபோல் அவளை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி.."

"அதாவது..."

"ஆம், முதலில் அவளைக்கொண்டு இளவரசர் துலாவர்மரைக்  கொன்றுவிட வேண்டும்.  அதேபோல் என்னிடத்தில் இப்போது இருக்கும் தனுசு சுந்தரரைக் கொண்டு உன்னைச் சிறைபிடிப்பதற்குப் பதிலாக ரிசபவேந்தரைக் கொல்லவேண்டும் என்று ஆணையிடுவோம்"

"அவர்கள் மறுத்தால்..."

"சிம்மசேனா, பதவிக்கு மயங்காதவர்கள் யாராவது உண்டா? பெரியப்பதவி தருகிறோம் என்று ஆசைகாட்டுவோம். கட்டாயம் அடிபணிவார்கள். பிறகென்ன, இன்று இரவில்  ஈருயிர்களின்  மரணம், நாளை காலை நம் இருவரின் அரசபதவி ஏற்பு" என்று மகிழ்ச்சி பொங்கப் பேச

"மதிமந்திரியாரே  நம்  திட்டம்  வெல்லுமா?    கனவு பலிக்குமா?"  என்று   சந்தேகத்துடன்  கேட்க
"அது எப்படிப்  பலிக்கும்"  என்று கம்பீரமாக ஒலிக்கும் அசரீரி குரல் வரும்  திசையைத் தெரிந்துகொள்ளச் சுற்றும் முற்றும் பார்க்க அங்கே அவர்கள் கண்ட காட்சி இருவரையும் உயிரோடுக் கொன்று எரித்துவிட்டது எனலாம்.

மிதுனசுந்தரி  என்ற மிதுனமதி, இளவரசி  மீனாம்பிகை, இளவரசர் துலாவர்மர்,  இராஜகுருவான  மகரகுரு.. ஆகியோரை அங்கே ஒன்றாகப் பார்த்த மாத்திரத்தில்  நீ... நீங்கள் .." என்று சேனாதிபதி  சிம்மசேனரின் நாக்கு உளறியது. . 

அதேநேரத்தில் தனுசு சுந்தரர் என்கிற தனுசுமல்லர் , ரிசபவேந்தர் அங்குத் தோன்ற "அரசே தா .. ...தா.. தாங்களா?" என்று திக்கினார் விருச்சிகர்.

"நாங்களே தான். இதுவரையில் பகையாய் இருந்தவர்கள் இப்போது ஒரே இடத்தில்  இருப்பது ஆச்சரியமாக இருக்கின்றதா?"

இருவரும் 'ஆமாம்' என்பதுபோல் தலையாட்டினார்கள்.

"உங்கள் இருவரின் சதித்திட்டம் எங்களுக்கு முன்னமே தெரியும். இதோ உங்கள் முன் இருவர் இருப்பவர்கள் வேறுயாருமல்ல. ஒருவர் மிதுனசுந்தரி பெயரில் இருந்தவர் மிதுனமதி. அதாவது எனது புதல்வி இளவரசியின் தோழி. போட்டியில் வீரனாக வெற்றிபெற்று என்னோடு சிறப்பு விருந்தில் கலந்துகொண்டது இந்நாட்டு இளவரசரின் மெய்க்காப்பாளர் தனுசுமல்லர். அவர் மூலம் தான் எல்லாமே தெரிந்துகொண்டோம். மதிமந்திரியாரே, நீங்கள் வயோதிகர் வேடத்தில்   கடகதேசத்திற்குச்  செல்லும்போது உங்களுக்குத் தெரியாமலே உங்களைப் பின்தொடர்ந்து வந்தோம். அதேவேளையில்  சேனாதிபதியாரே, உங்களைக் காண உங்கள் இளவரசர்  துலாவர்மரும்,  இராஜகுருவாகிய  மகரகுருவும் வருவதை அறிந்தோம். அவர்களிடத்தில் நடந்ததை விளக்கினோம். அவர்களின் உதவியால் நீங்கள் இருவரும் எங்களிடம் இப்போது பிடிபட்டுள்ளீர்கள்.  உங்கள் வாயால் உண்மையை வெளிவரச்செய்யவே நாங்கள் காத்திருந்தோம்" என்கிற உண்மையை உடைத்தார்கள்

'தாங்கள் கையுங்களவுமாய் பிடிபட்டுவிட்டோம்' என்று தெரிந்தவுடன் தலையினைத் தொங்கப்போட்டு ஆரவாரமில்லாமல் முகத்தில் பேயறைந்தது போல் இருள்சூழ்ந்த அமைதியாகக் காணப்பட்டனர்.

"இவர்களின் மூலம் ஓர் உண்மை புரிந்தது. அதாவது அரசரிடமோ அல்லது தலைவரிடமோ பிடிவாதம், கோபம், பொறாமை போன்ற குணங்களில் ஏதாவது ஒருகுணம் இருந்துவிட்டால் அதை வைத்துக்கொண்டு நமக்குக்கீழ் இருப்பவர்கள் பலர் பலனடைவார் என்பதே " இதற்கெல்லாம் நாம் நன்றி சொல்ல வேண்டியவர்கள் இந்த  இருவர்களான  மிதுனமதிக்கும்  தனுசுமல்லரும்  தான்"  என்றார்  ரிசபவேந்தர்.

"நம் இராஜகுரு கூறியது போல் அனைத்தும் சரியாக நடந்துவிட்டது. ஒரு பெண்ணால் அனைத்து பிரச்சனையும் சுமூகமாகத்  தீர்ந்துவிட்டது. கடகதேசமும்  மேசகிரியும்  ஒன்று சேர்ந்துவிட்டதால்  திட்டமிட்டபடி வரும் சித்திரைத்  திங்கள்  பௌர்ணமியன்று ஆதிபகவன் கோவிலுக்கு  கும்பாபிசேகமும் தங்கத்தேர் பவனி வருவதற்கு ஏற்பாடு செய்திடவேண்டும்"  என்றார்  துலாவர்மர்.

"ஒன்றை மறந்துவிட்டீர்கள்,  மச்சக்கன்னி  இளவரசி  மீனாம்பிகைக்கும்  இளவரசர்  துலாவர்மருக்கும்  திருமணம் அதே நாளில் நடந்தால் மக்கள் ஆனந்தப்படுவார்கள்" என்றார் மகரகுரு.

"அவ்வாறே நடக்கட்டும்" என்றார் மேஷகிரி அரசர் ரிஷபவேந்தர்.  

"மீண்டும் ஒன்றை மறந்தீர்கள். அன்றைய தினமே நம்மிரு நாட்டின் நன்மைக்காக தங்கள் உயிரைச் துச்சமாக மதித்த மிதுனமதிக்கும் தனுசுமல்லருக்கும் திருமணம் முடித்துவைத்தால் மக்கள் எல்லோரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதப்பார்கள்" என்று இளவரசர் துலாவர்மர் பரிந்துரைக்க அவரவர் துணையினைப் பார்த்தனர்.
முற்றும் 
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


5.2.2016 திருத்தாமல் இருந்த
கடகதேசமும் மேசகிரியும்  (குறுநாவல்)
மதுரை  கங்காதரன்
இக்குறுநாவலில் வரும் முக்கிய கதா பாத்திரங்கள்


நிறைவு  பாகம்  ....
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


                                     பாகம் :4
"மிதுனமதிஇதுவரையிலும் நடந்த சம்பவங்களையும் இனிமேலும் நடக்கப்போகின்ற ஆபத்தை கூறினாய். அதை முறியடிக்கும் வழியை நான் கூறுகிறேன்ஆனால் அதற்கு உங்களுடைய ஒத்துழைப்பும் எதையும் செய்யும் துணிச்சலும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்இதனால் உங்களுக்கு அவபெயரும் அவமானமும் கூட தற்காலிகமாக ஏற்படலாம்அதைத் தாங்கிக்கொள்ளும் மனோதைரியம் வேண்டும்"
"தனுசுமல்லரேஎது செய்தாலும் எனக்கு பூரணச் சம்மதம்மேற்கொண்டு நடக்கவேண்டியவைகளை தாமதப்படுத்தாமல் செய்வோம்"அப்படியானால் இதோ எனது அடுத்த திட்டம்என்று இரகசியமாக தனுசுமல்லர் மிதுனமதியின் காதில் ஏதோ கூற அவளுக்கு சற்று பயம் கலந்த நடுக்கம் ஏற்படுவதை கவனித்தவர்
"இதற்கே இப்படி பயப்பட்டால் போகப்போக இதை விட ஏற்படும் பயங்கரத்தை எவ்வாறு சமாளிப்பாயோ?"
"நான் எதற்கும் பயப்படவில்லைஉங்களுக்குள் இருக்கும் இராஜதந்திரத்தை நினைத்துப் பார்த்தேன்அவ்வளவு தான்"
"முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும்தந்திரத்தை தந்திரத்தால் தான் வெற்றி அடையமுடியும்நான் சொல்லியபடி ..."
"நான் இப்போதே இறங்கிவிட்டேன்"
"ஆகட்டும் புறப்படுஉன்னைக் கைதியாக அரசவைக்கு அழைத்துச் செல்லும் முன் உனது இதயத்தை இரும்பாக்கிக் கொள்என்று தனுசுமல்லரின் சொல்லை ஆணையாய் ஏற்றுக்கொண்டு அதன்படி நடக்கலானாள்.
அரசவையில் கூடியிருக்கும் அனைவரின் முன்பாக ஒரு கைதியாக மிதுனமதியை தனுசுமல்லர் அழைத்துவர அவையில் உள்ள அனைவரும் பார்த்து பரபரப்பு அடைந்தனர்முக்கியமாக சேனாதிபதி சிம்மசேனர் விழி பிதுங்கியபடி அவளைப் பற்றிய ஆயிரம் சிந்தனை அவரது மனதில் ஓடியதுஅழகும் கம்பீரமும் கொண்ட பெண்ணை இப்போதுதான் முதன்முதலாக பார்க்கிறார்.
"தனுசுமல்லரேஏன் ஒரு பெண்ணை கைதியாக இழுத்து வந்துள்ளாய்அப்படியென்ன அவ்வளவு பெரிய குற்றம் செய்துவிட்டாள்?"

"இளவரசேநான் சொல்லப்போகும் செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியை தரும்இருப்பினும் சொல்கிறேன் கேளுங்கள்இப்பெண்ணின் பெயர் மிதுனசுந்தரிஒற்றர்களின் மூலம் எனக்குக் கிடைத்த செய்தி யாதென்றால்தங்களை கொலை செய்வதற்காக இப்பெண் இங்கு வந்துள்ளார் என்பதை அறிந்துகொண்டேன்எப்படியோ என் கண்களில் அகப்பட்டுவிட்டாள்இப்பெண்ணால் இந்த கடகதேசத்திற்கு ஆபத்து ஏற்படலாம்தாங்கள்தான் இப்பெண்ணை நன்கு விசாரித்து தகுந்த தண்டனையை விரைந்து கொடுக்கவேண்டுகிறேன்என்று கர்ஜிக்க அங்குள்ள அனைவரும் 'இவளுக்கு மரணதண்டனை கொடுங்கள்என்று சலசலப்புடன் கூச்சலிட்டனர்.

அப்போது மிதுனமதி ஒருகணம் அவமானமடைந்தாலும் தன் நாட்டை காப்பாற்றவும் இளவரசி மீனாம்பிகையையும் கண்டுபிடித்தாக வேண்டுமென எண்ணி மனதில் வைராக்கியம் கொண்டு நடப்பவைகளை அனைத்தையும் சகித்துக்கொண்டாள்.
"அமைதிஅமைதிஎன்று இளவரசர் துலாவர்மர் கூறியவுடன் அரச சபை அமைதியானது.

"பெண்ணேஎமது தனுசுமல்லர் சொன்னதை நீ மறுக்கிறாயா? அல்லது ஏற்கிறாயா?"
"அவர் சொன்னது எல்லாம் உண்மைஉங்களது மூதாதையர்களால் எங்களது குடும்பம் அழிந்துவிட்டதுஉங்களைக் கொல்வதற்காகவே என் உயிரை தக்கவைத்துக் கொண்டதோடு இவ்வளவு வருடங்கள் காத்திருந்தேன்நேரம் கைகூடும்வேளையில் தனுசுமல்லர் சாமர்த்தியமாக தடுத்துவிட்டார்நீங்கள் என்ன தண்டனை கொடுத்தாலும் எனக்குச் சம்மதம்தான்என்று துணிவுடன் பதிலளித்தாள்.

"பெண்னேஉனது வீரத்தை நினைத்து நான் பூரிப்படைகிறேன்என்ன தான் உணர்ச்சிகரமாக பேசினாலும் நீ சொல்லும் காரணம் எனக்கு சரியாகப்படவில்லைஉனக்கு வேறு ஒரு உள்நோக்கம் இருக்கின்றது என்று நம்புகிறேன்ஒருவேளை உனக்கு நாங்கள் தவறாக தண்டனை கொடுத்துவிட்டால் இம்மக்கள் கொதித்துவிடுவார்கள்அது மட்டுமா இதையே எதிரிகள் தங்களுக்குச் சாதகமாக்கி கலவரம் உண்டுபண்ணி பெரும் பிரச்சனையாக மாற்றிவிடுவார்கள்ஆகவே இப்பெண்ணின் குற்றம் நிரூபணமாகும் வரை நமது சேனாதிபதி சிம்மசேனர் கண்காணிப்பில் இருக்கட்டும்.இவளது வீரம் நமக்கு எப்போதாவது கட்டாயம் தேவைபடும்என்ன சொல்லகிறீர்கள் ஜோதிடர் மகரகுரு அவர்களேஎன்று கேட்க அவர்மட்டுமில்லாது அனைவரும் இசைந்தனர்.
சிம்மசேனருக்கு பழம் நழுவி தேனில் விழுந்தது போல் துள்ளினார்ஏனெனில் 'எதிரிக்கு எதிரி நண்பன் என்பது விதியல்லவாமிதுனசுந்தரியைக் கொண்டு தனது பாதாள அறையில் இருக்கும் இளவரசி மீனாம்பிகையை தன் எண்ணங்களுக்கேற்ப பணிய வைக்க வேண்டும்முடிந்தால் இவளின் மூலம் இந்த கடகதேசத்து இளவரசர் துலாவர்மரின் கதையை முடிக்கவும் தயங்கக் கூடாது என்று உறுதி கொண்டார்.
வீரர்கள் அவளை கைதிகோலத்துடன் அழைத்து வருவதைப் பார்த்த சிம்மசேனர் "வீரர்களே முதலில் இவளை விடுவித்து சுதந்திரமாக என்னோடு வரட்டும்என்று அவர் மாளிகையினுள் இருக்கும் பாதாள அறைக்கு அழைத்துச் சென்றார்.  

"என்ன மிதுனசுந்தரி இவ்வளவு ஆச்சரியமாகப் பார்க்கிறாய்இன்னொரு அதிசயத்தையும் நான் காட்டுகிறேன். வா...என்று அங்கு அடைத்து வைத்திருந்த இளவரசி மீனாம்பிகையைக் காட்டினார்.
மீனாம்பிகை, மிதுனமதியைப் பார்த்த மாத்திரத்தில் நடந்தவற்றை  அறியாமல் "துரோகிநீயுமா இவர்களோடு சேர்ந்து என்னையும் என் நாட்டையும் காட்டிக்கொடுக்கவும் பழிவாங்கவும் துணிந்துவிட்டாய்எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கும் என்பதை அறிந்திடாமல் வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பி ஏமாந்துவிட்டேன்என்று புலம்பித்தள்ளினாள்.
மேசகிரியில் மதிமந்திரி விருச்சிகர் அரசரவையில் கட்டிவிட்ட கதை அனைவரையும் நம்பவைத்ததுஅதாவது தன்னையும் சகவீரர்களையும் கடகதேசத்தவர்கள் சிலர் தாக்கிவிட்டு இளவரசி மீனாம்பிகையையும் மிதுனமதியையும் தூக்கிச் சென்றுவிட்டனர் என்று புழுகினார்அதோடு நிற்காமல் மேசகிரியை மதிக்காமல் வரும் பௌணர்மியன்று கடகதேசத்து மக்கள் மட்டும் கலந்துகொள்ளும் வகையில் ஆதிபகவன் கோவிலுக்கு கும்பாபிசேகமும்   தங்கத்தேர்  ஊர்வலத்திற்கும் ஏற்பாடு செய்துவருகிறார்கள் என்கிற செய்தியை கேட்டு பொறுக்க முடியாமல்"விருச்சிகரே! கோழைகள்! இரவுநேரத்தில் கேவலம் பெண்களிடத்திலா அவர்களின் வீரத்தைக் காட்டுவதுஅவர்களை சும்மா விடக்கூடாது.தக்கப்பாடம் கற்பித்தே தீரவேண்டும்இவ்வேளையில் தாங்கள்தான் நல்ல யோசனை கூறவேண்டுகிறேன்என்று அரசர் ரிசபவேந்தர் கேட்க'இதுதான் நல்ல சந்தர்ப்பம்எரிகின்ற தீயில் எண்ணெய் விடுவதற்குஅதை மதிமந்திரி விருச்சிகருக்கு சொல்லியாத் தரவேண்டும்அப்போதுஅவர் தன் நாட்டின் மீது அதிக அக்கறையுள்ளவராக நடித்தார்.

"வேந்தேயாவையும் நினைக்கும் போது நெஞ்சம் பதறுகின்றதுபழிவாங்க மனம் துடிக்கின்றதுபோர்முரசு கொட்ட உத்தரவு கொடுங்கள்என்று குமுறினார்.

"விருச்சிகரேபொறுங்கள்பொருத்தார் பூமியாள்வார்எதுவும் நிச்சயமாகத் தெரியாதவரைக்கும் நாம் எந்த ஒரு முடிவுக்கும் வந்துவிடக் கூடாது.ஆனால் எதற்கும் நாம் தயாராக இருக்கவேண்டும்அதற்கு முதற்கட்டமாக ஆண்டுதோறும் நடைபெறும் சிறந்த வீரர்களை தேர்ந்தெடுக்கும் போட்டியை நடத்தி அதில் தேர்வாகும் வீரர்களை நமது படையில் சேர்த்து அவர்களை போருக்குத் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்அதோடு வழக்கம்போல் வெற்றிபெறும் வீரனை என்னுடன் தனியாக சிறப்புவிருந்திற்கும்  ஏற்பாடு செய்யவேண்டும்என்றுஆணையிட "அப்படியே ஆகட்டும் அரசேஎன்று கூறி விடைபெற்றார் மதிமந்திரி விருச்சிகர்.

போட்டித்திடல் கவர்ச்சியாக அலங்கரிக்கப்பட்டுயிருந்ததுமேசகிரி மக்கள் வீரத்திற்கு சோடை போகிறவர்கள் கிடையாது என்பதை நிரூபிக்கும்வண்ணம் போட்டியை கண்டுகளிக்க வந்திருக்கும் கூட்டத்திற்கு இணையாக வீரர்களும் இருந்தனர்அந்தக் கூட்டத்தில் தனுசுமல்லர், ‘தனுசுசுந்தரர்’ என்ற பெயரில் மக்களோடு மக்களாக அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.
போட்டிகள் ரம்பமாயினமக்கள் தங்கள் ஆரவாரங்களை கைதட்டல்கள் மூலம் வெளிப்படுத்தினர்மலைகள் உயிர்பெற்று மோதிக்கொண்டதுஇருந்தது அந்த போட்டித்திடல்அனைத்துப் போட்டிகள் நடந்து ஒரு முடிவுக்கு வந்ததுவழக்கம்போல் எப்போதும் வெற்றிபெறும் வீரனேஇம்முறையும் வெற்றிபெற்றான்அதைப்பார்த்த மேசகிரி அரசர் ரிசபவேந்தர்இவ்வீரனை வெல்ல இக்கூட்டத்தில் யாரேனும் இருக்கிறீர்களா?"என்று அரைகூவல் விடுக்க , இதுதான் தக்கசமயம் என்று தனுசுமல்லர் "ஏன் இல்லைநான் இருக்கிறேன்!" என்று கர்ஜிக்க அரசர் முதற்கொண்டுஅனைவரும் அவரை வியப்புடன் பார்த்தனர்அந்த சவாலை ஏற்றுக்கொண்ட வீரன் தனுசுமல்லரின் வீரத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் கீழே வீழ்ந்தான்மிக்க மகிழ்ச்சியடைந்த ரிசபவேந்தர் "வீரனே உன் வீரம் என்னை மெய்சிலிர்க்க வைத்துவிட்டதுஇன்று நீ எனது விருந்தாளிஎனதுஅரண்மனையில் உனக்கு தனியாக ராஜவிருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளேன்அதில் கலந்துகொள்ள வேண்டுகிறேன்என்று கேட்டுக்கொள்ள "அதை கௌரவரமாகக் கருதுகிறேன்என்று பதிலளிக்க அன்றைய இரவில் இருவரும்  சந்தித்தனர்நேரத்தை வீணாக்காமல் வந்த காரணத்தை சொல்லிமுடித்துவிடுவதில் குறியாக இருந்தார் தனுசுமல்லர். "இவ்விருந்தில் கலந்துகொள்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகின்றதுஇருந்தாலும்அரசே, முதலில் தாங்கள் என்னை  மன்னிக்கவேண்டும்இந்த சந்திப்புக்கு காரணகர்த்தா யாறென்றால் இளவரசி மீனாம்பிகையின் தோழி மிதுனமதிஎன்று கூற ரிசபவேந்தரின் முகம் பிரகாசமடைந்தது.

"அப்படியென்றால் நீங்கள்...."
தன் வேடத்தை களைத்து "நான் தான் கடகதேசத்தின் இளவரசர் துலாவர்மரின் மெய்காப்பாளர் தனுசுமல்லர்என்று சொன்னவுடன்
".. நீங்கள் தானா அவர்இளவரசி மீனாம்பிகையைப் பற்றி..." என கேட்டதுதான் தாமதம் "இளவரசியார் பத்திரமாக சேனாதிபதி சிம்மசேனரின் கண்காணிப்பில் மிதுனமதி கவனிப்பில் இருக்கிறார்"

"அப்படியென்றால் நீங்கள்...."
என்று நடந்தவற்றையும் அதோடு இருநாட்டில் நடக்கும் பின்னனி சதியையும் எடுத்துக் கூறினார் தனுசுமல்லர்.
"அப்படியாஇனி இளவரசி பற்றிய எனது பொறுப்புகள் குறைந்தது"
"குறைந்ததாஅரசேஇனிதான் தங்கள் பொறுப்பு கூடியிருக்கிறது!"
"என்ன தனுசுமல்லரே புதிர்போடுகிறீர்கள்?"

"ஆம் அரசேஎன்று இளவரசியின் மூன்று மச்சத்திற்கு உரியவரான தனது இளவரசர் துலாவர்மரைப் பற்றி கூற மகிழ்ச்சியின் உச்சத்தை அடைந்தார்அடுத்து என்ன செய்வதென்றறியாது திகைத்தார்மீண்டும் இயல்புநிலைக்கு திரும்ப அவசரமாய் அவர் காதில் ஏதோ கடித்தார். "..."என்று தன்னையறியாமல் அலறினார்.

"அரசேபாம்பின் கால்தடம் தெரிந்துகொள்ளவேண்டுமென்றால் என்னையும் பாம்பாக மாற்றுங்கள்என் தேசத்தில் உலாவும் பாம்பை(சிம்மசேனரை) கொல்ல ! பிறகு நடப்பது எல்லாம் நன்மையில் முடியும்இதேபோல் மிதுனமதிக்கும் ஒரு வேலையை கொடுத்திருப்பார்கள்.இங்குள்ள பாம்பை (விருச்சிகரை) கொல்வதற்கு ...."
"....எனக்கு எல்லாம் புரிந்துவிட்டதுஇப்போது பார்" என்று தனது இருகைகளைத்தட்டி "யாரங்கேஉடனே மதிமந்திரி விருச்சிகரை அழைத்து வாருங்கள்என்று ஆணையிட உடனே அரசர் முன் நின்றார். "அரசேதாங்கள் அழைத்த காரணம் யாதாயினும் அதை சிரமேற்று முடிக்கிறேன்"

"ஒன்றுமில்லைநம் இளவரசி மற்றும் அவளது தோழியை கடகதேசத்தவர் சிம்மசேனர்தான் கடத்தியிருப்பார் என்று நான் சந்தேகிக்கிறேன்எது எப்படி நடந்தாலும், யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை அக்கொடியோனின் தலையை இவ்வீரன் மூலம் கொண்டுவருவதற்கு ஏற்பாடுசெய்யவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்அதைக் கேட்ட விருச்சிகரின் இரத்தம் உறைந்ததுகாலடி எடுத்துவைக்க முடியாதபடி சிலைபோல் நின்றார்.
'தன் விணை தன்னைச் சுடும்' 'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்என்கிற பழமொழிகள் அவர் நினைவிற்கு வந்திருக்கும்.

ஒப்புக்காக அவர் வாயளவில் "ஆகட்டும் அரசேஇதோ அந்த காரியத்தை முடித்து வெற்றியோடு வருகிறேன்" என்று சொல்லி விடைபெற்ற பிறகு அவர் மனதில் 'இச்செய்தியை  உடனே  சேனாதிபதி சிம்மசேனரிடம் சொல்லி எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதற்காக தனுசு சுந்தரர்வேடத்தில் இருக்கும் தனுசுமல்லரை அங்கு சற்று ஓய்வு எடுக்கச்சொல்லிவிட்டு எவர் கண்ணிலும்படாமல் வழக்கமாக வயோதிகர் வேடமிட்டுசிம்மசேனரை சந்திக்க விரைந்தார்பதற்றமாய் வரும் அவர் வரவை சற்றும் எதிர்பார்க்காதவராய் "விருச்சிகரேநல்லவேளை வந்தீர்கள்!உங்களுக்கு ஆபத்து காத்திருக்கின்றது' என்கிற செய்தியினை உடனே கூறிவிட வேண்டுமென்று துடித்தேன்என்று பதறினார் சேனாதிபதி சிம்மசேனர்விருச்சிகரோ அதை காதில் வாங்கிக் கொண்டு
"முதலில் இளவரசி மீனாம்பிகை எங்கு இருக்கிறார் என்பதைச் சொல்லுங்கள்?"
"என் மாளிகையில் இருக்கும் பாதாளயறையில் இருக்கிறார்"

"அப்பாடாஇப்போது 'என்னுடைய ஆபத்துஎன்னவென்று சொல்லுங்கள்"
"நான் முன்னமே சொல்லியிருந்தேனே வீரப்பெண் மிதுனசுந்தரி!"
"ஆமாம்நீங்கள் கூட அவளையும் நம் திட்டத்திற்கு உபயோகித்துக் கொள்ளலாம் என்று கூறியிருந்தீர்களேஅதற்கென்ன இப்போது?"

"எந்தத் தடை வந்தாலும் தகர்த்தெறிந்துவிட்டு அவள் உதவியோடு ங்களைக் கொல்ல வேண்டுமென்று இளவரசர் துலாவர்மர் எனக்கு ஆணையிட்டுள்ளார்அதை நினைக்கும் என்மேனி நடுங்குகிறதுஎன்று பயத்துடன் கூறியதைக் கேட்ட விருச்சிகர் " அட இவ்வளவுதானா"

"உங்களுக்கு எல்லாமே எளிதாய் தெரிகிறது"
"வீண் பயம் வேண்டாம்அறிவாளிகளுக்கு எதுவுமே தடையாய் இருக்காதுநமது அடுத்த திட்டம்…"
"என்ன என்ன சீக்கிரம் சொல்லுங்கள்திட்டங்கள் போட்டே நாம் அரசர்களாகும் காலம் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கின்றது"
"அவசரம் கூடாதுஇச்சமயம் நிதானம் தேவைஅதாவது என்னிடத்தில் இருக்கும் தனுசு சுந்தரர் மூலமாக உங்களுக்கு ஆபத்தும், உங்கள் கண்கானிப்பில் இருக்கும் மிதுனசுந்தரியால் எனக்கு ஆபத்தும் இருக்கின்றதல்லவாஅவர்கள் மூலம் நமக்கு வந்திருக்கும் ஆபத்தை எய்தவர்களின் பக்கமே திருப்பிவிட்டால் ..."
"தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?"

"புரியவில்லைஅவர்கள் இருவரும் நம் பேச்சைத்தான் கேட்பார்கள்மிதுனசுந்தரி ஏற்கனவே இளவரசர் துலாவர்மரை கொல்லவேண்டும் என்று லட்சியமுள்ளவள்அதை இப்போது நமக்கு சாதகமாக பயன்படுத்தி.."
"அதாவது..."
"ஆம்அவளைக்கொண்டு துலாவர்மரை கொன்றுவிடவேண்டும்அதேபோல் என்னிடத்தில் இப்போது இருக்கும் தனுசு சுந்தரரைக் கொண்டு ரிசபவேந்தரை கொன்றுவிடவேண்டும்"
"அவர்கள் மறுத்தால்..."
"பதவிக்கு மயங்காதவர்கள் உண்டோபெரியபதவி தருகிறோம் என்று ஆசைகாட்டுவோம்கட்டாயம் அடிபணிவார்கள்பிறகென்னஇன்று இரவில் ஈருயிர்களின் மரணம்நாளை காலை நம் இருவரின் அரசபதவி ஏற்புஎன்று மகிழ்ச்சி பொங்க பேச
"நம் திட்டம் வெல்லுமாகனவு பலிக்குமா?" என்று சந்தேகத்துடன் கேட்க
"அது எப்படி பலிக்கும்என்று அசரீரி குரல் வரும் திசையை தெரிந்துகொள்ள சுற்றும் முற்றும் பார்க்க அங்கே அவர்கள் கண்டகாட்சி இருவரையும் உயிரோடு கொன்றுவிட்டது எனலாம்.

"மிதுனசுந்தரிஇளவரசர் துலாவர்மர்ஜோதிடர் மகரகுரு..நீ... நீங்கள் .." என்று உளறினார் சேனாதிபதி சிம்மசேனர்அதேநேரத்தில் "தனுசு சுந்தரர்,ரிசபவேந்தே.. ...தா.. தாங்களா?" என்று திக்கினார் விருச்சிகர்.

"நாங்களே தான்இதுவரையில் பகையாய் இருந்தவர்கள் இப்போது ஒரே இடத்தில் இருப்பது ஆச்சரியமாக இருக்கின்றதா?"
இருவரும் 'ஆமாம்என்பதுபோல் தலையாட்டினார்கள்.

"உங்களது சதித்திட்டம் எங்களுக்கு முன்னமே தெரியும்உங்கள் வாயால் வெளிவரச்செய்யவே நாங்கள் நடத்திய நாடகம் இதுஇதோ இவள் மிதுனுசுந்தரி அல்லஇளவரசி மீனாம்பிகையின் தோழி மிதுனமதிஇதோ இவர் தனுசு சுந்தரர் இல்லைஎன் மெய்க்காப்பாளார் தனுசுமல்லர்"என்கிற உண்மையை உடைத்தார்கள்"
'தாங்கள் கையும்களவுமாய் பிடிபட்டுவிட்டோம்' என்றும் பாராமல் ஆரவாரமில்லாமல் அமைதியாக இருந்தனர்.

"இவர்களின் மூலம் ஒர் உண்மை புரிந்ததுஅதாவது அரசரிடமோ அல்லது தலைவரிடமோ பிடிவாதம்கோபம்பொறாமை போன்ற குணங்களில் ஏதாவது ஒருகுணம் இருந்துவிட்டால் அதை வைத்துக்கொண்டு நமக்குகீழ் இருப்பவர்கள் பல பலனடைவார் என்பது தான்.இதெற்கெல்லாம் நாம் நன்றி சொல்ல வேண்டியவர்கள் மிதுனமதியும் தனுசுமல்லரும் தான்என்றார் ரிசபவேந்தர்.
"மகரகுரு கூறியது போல் ஒரு பெண்ணால் அனைத்து பிரச்சனையும் சுமூகமாக தீர்ந்துவிட்டதுகடகதேசமும் மேசகிரியும் ஒன்றுசேர்ந்துவிட்டதால் திட்டமிட்டபடி வரும் சித்திரை திங்கள் பௌர்னமியன்று ஆதிபகவன் கோவிலுக்கு கும்பாபிசேகமும் தங்கத்தேர் பவனி வருவதற்கு ஏற்பாடு செய்திடவேண்டும்என்றார்  துலாவர்மர்.
"ஒன்றை மறந்துவிட்டீர்கள்மச்சக்கன்னி இளவரசி மீனாம்பிகைக்கும் இளவரசர் துலாவர்மருக்கும் திருமணம் அதே நாளில் நடந்தால் மக்கள் ஆனந்தப்படுவார்கள்என்றார் ஜோதிடர் மகரகுரு.

"மீண்டும் ஒன்றை மறந்தீர்கள்அன்றைய தினமே மிதுனமதிக்கும் தனுசுமல்லருக்கும் திருமணம் முடித்துவைத்தால் எல்லோரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதப்பார்கள்என்று ரிசபவேந்தர் பரிந்துரைக்க அவர்கள் வெட்கத்தில் முகத்தை மூடிக்கொண்டனர்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++



No comments:

Post a Comment