Pages

Sunday 14 February 2016

5.4.2020 திருத்திய கடகதேசமும் மேசகிரியும் (குறுநாவல்) பாகம் :3

5.4.2020 திருத்திய கடகதேசமும் மேசகிரியும்  (குறுநாவல்) 
அல்லது
மிதுனமதி (குறுநாவல்)
பாகம் :3
மதுரை கு.கி.கங்காதரன்



குறிப்பு: மேலே காட்டப்பட்ட படங்கள், வாசகர்கள் படிக்கும்போது
ஞாபகம் வைத்துக்கொள்ள மட்டுமே -- நன்றி படங்களுக்காக
பாகம் :3      

கோவில் வாசலில் வழக்கதிற்குமாறாகப் புதிதாக நின்று கொண்டிருந்த குதிரைவண்டியைப் பார்த்த மாத்திரத்தில்  இளவரசி மீனாம்பிகை   "மதிமந்திரியாரே,  வழக்கமாக  வரும்வண்டி  வரவில்லையா? இது புதிதாக இருக்கின்றதே!" என்று தனது புத்திசாலித்தனத்தைக் காட்டினாள். 

சற்றுத் தடுமாறியபடி  "அது வந்து.... வந்து..."என்று அவரின் நாக்கு உளறியது.

"ஏன் இவ்வளவு திணறுகிறீர்கள்? அதையும் நானேச் சொல்லிவிடுகிறேன்.  அதாவது  இன்றோடு  எனது  பூஜை முடிகின்றதல்லவா?  அதனால் தானே!" என்று  விருச்சிகர்  வாயால்  உண்மையைச்  சொல்லவிடாமல் இளவரசி முந்திக்கொண்டாள்.

அவரும்
 "....ஆமாம், ஆமாம்" என்றார்.

"மதிமந்திரியாரே, மிதுனமதி வந்துவிடுவாள். அவளையும் அழைத்துச் செல்வோமே!"

"இளவரசியாரே, இரவுப்பொழுது அதிகமாகிவிட்டது. உங்களைப் பத்திரமாக அரண்மனையில் சேர்ப்பது எனது கடமை. மிதுனமதியை அடுத்த வண்டியில் உங்கள் பின்னாலே அனுப்பிவைக்கிறேன்"     
"ஆகட்டும் மந்திரியாரே" என்றவாறு வண்டியை நோக்கி நடந்தார் இளவரசி.   

குதிரை வண்டியின்  படியில் இளவரசி மீனாம்பிகை தனது வலதுகாலை வைத்து ஏறும்போது,  வண்டிக்கடியில்   ஒளிந்திருந்த மிதுனமதி, ஏதேச்சையாக அவரது வலது காலைப் பார்த்தாள்.  கோவில் விளக்கு வெளிச்சத்தில் அந்தக் குதிக்காலின் சற்று மேலே ஆயுத எழுத்து வடிவம் () போன்று பெரிய மூன்று மச்சங்கள் அருகருகே இருப்பதைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டாள். அதை ரசிக்கும் சூழ்நிலையில் மனம் இல்லாததால் மேற்கொண்டு நடக்கப்போகும் சம்பவத்தில் கவனம் செலுத்தினாள்.

வண்டியில் ஏறிய இளவரசி, வண்டிக்காரனிடத்தில் அரண்மனைக்குப்  புறப்படுமாறு  இளவரசி ஆணையிட்டார். 

"இளவரசியாரே, ஒரு வேண்டுகோள். காட்டு விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால்  இன்று நாம் வழக்கமான பாதையில் செல்லாமல்  சுற்றுப்பாதையில் செல்லப் போகிறோம்"  என்றதற்கு 

'மதிமந்திரி, எல்லாமே என்  நன்மைக்காகவேச்  செய்வார்'  என்று  பரிபூரண நம்பிக்கையோடு  "ஆகட்டும்" என்று தலையசைத்தாள் மீனாம்பிகை.

நடப்பவையெல்லாம்  குதிரைவண்டிக்கடியில் இருந்த  மிதுனமதி, கூர்மையாகக் கவனித்துக் கொண்டு வந்தாள். 

இளவரசியின் வண்டியின் பின்னால் மதிமந்திரி விருச்சிகரின் வண்டி சிறிது தூரம் தொடர்ந்து  வருவது போன்று பாவனை செய்துவிட்டு அதற்குப்பின்  நடுவிலேயேப் பிரிந்து சென்றுவிட்டார். அதனையும் பார்த்திடத் தவறவில்லை மிதுனமதி. நேரம் செல்லச்செல்ல  வண்டியின் வேகம்  பன்மடங்கு அதிகரித்தது. அதனால் வண்டிக்கடியில் இருந்த மிதுனமதியின் பிடி மெல்ல மெல்லத்  தளர்ந்தது. ஒருவளைவில் வேகமாகத் திரும்பும்போது  வண்டிக்கடியில்  இருந்த  மிதுனமதி  தூக்கியெறியப்பட்டாள். அவ்வண்டி அனைவரின் கண்களிலிருந்து தப்பித்து சேனாதிபதி  சிம்மசேனரின் பாதாள அறையை அடைந்தது. மாறுவேடத்தில் சிம்மசேனர் இருந்ததால் யாருக்கும் சந்தேகம் எழவில்லை. 
ப்போதுதான் இளவரசி மீனாம்பிகை தன்னை யாரோ கடத்திக் கொண்டு வந்துள்ளனர்  என்பதை உணர்ந்தாள்.  அவர்  சுதாரிப்பதற்குள்  அங்கிருந்த பெண்,  மீனாம்பிகையின்  மூக்கருகில் ஒருவிதப் பச்சிலையைக் காட்ட அதை முகர்ந்தவுடன் அவர் மயக்கமுற்றாள்.

கடகதேசத்தில்... 

மறுநாள் காலை இளவரசர் துலாவர்மரின் ஆணைப்படி, தங்கத்தேரை மெருகேற்றி, அதனைச் செப்பனிடும் பணிகளின் முன்னேற்றத்தைத் தெரிந்துகொள்ளத் தனது குதிரையில் சென்று கொண்டிருந்த மெய்க்காப்பாளரும்  சகலகலாவல்லவருமாகிய தனுசுமல்லர்,  சற்றுத் தொலைவில் யாரோ 'ஐயோ.. அம்மா' என்று முனங்கல் ஒலி கேட்க அத்திசையை நோக்கி விரைந்தார்.

அங்கு....அழகான ஒரு பெண், தலையில் அடிபட்டு இரத்தம் கசிவதுடன் மெல்ல மெல்ல அவள்  சுயநினைவை இழந்து மயங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தவுடன் அவளருகே சென்று உற்றுப்பார்த்தார் தனுசுமல்லர்.  'யார் இந்தப் பெண், புதிதாக இருக்கின்றாளே?  இங்கு எப்படி வந்தாள்?  இவளுக்கு இந்நிலை எப்படி வந்தது? இவள் எந்த நாடாக இருப்பாள்?' போன்ற பல கேள்விகள் அவர் மனதில் எழுந்தன. அவரின் எல்லாக் கேள்விகளுக்கும்  பதில்களாக அவளது கையைப் பிடித்து நாடி பார்க்கும்போதுக் கிடைத்தது. காரணம்... அவளது  மணிக்கட்டு பகுதியில்  'நட்சத்திரக்குறி  ஒன்று இருப்பதைப் பார்த்துத் திடுக்கிட்டுப் போனார். இவள்... நிச்சயமாகத் தமது எதிரி நாடான  மேசகிரியைச் சேர்ந்தவளாக இருக்கவேண்டும். இக்குறியை அடையாளமாகக் கொண்டவர்கள்,  நாட்டைக் காக்க எதையும் செய்யும் துணிச்சல்  உள்ளவர்கள்.  எதற்காக  இங்கு வந்திருப்பாள்? ஒருவேளை நமது இராஜகுரு செல்லியது போல், 'இந்நாட்டிற்கு   அழிவு  இவளால்  வரப்போகிறதோ! அதேசமயத்தில்  அப்பெண்ணால்  அழிவிலிருந்து  காக்கவும்  முடியும் என்றும் சொன்னாரே!' என்று அவர்   மனதில் பலவிதக் குழப்பமான எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன.  அதெல்லாவற்றையும் விட  இப்போது தமது  எதிரிநாட்டுப் பெண்ணான இவளுக்கு வைத்தியம் பார்ப்பதா?  வேண்டாமா? இந்த அழகிக்குப் பின்னால் என்னென்ன ஆபத்து  இருக்கப்போகிறதோ?  என்கிற குழப்பமும் வந்தது.  கடைசியில் அவரது மனிதாபிமான இரக்க குணமே வென்றது.

தனுசுமல்லர் விரைவாக ஒரு துணியால் இரத்தம் கசிவதைத் துடைத்துவிட்டு அவர் வைத்திருந்த  பச்சிலையைத் துணியில் வைத்துத் தலையில் கட்டியபோது அவள் முழுவதுமாகத் துவண்டு மயங்கிச் சரிந்தாள். யாரும் எவரும் இங்கு இல்லாத நிலையில் தானும் இவளை விட்டு விட்டுச் சென்றால் 'இவள் உயிர் பிரிந்து போகும் அபாயம் உண்டாகலாம்' என்று எண்ணினார். அதோடு 'இவள் யாராக இருந்தாலும், என்ன வந்தாலும் சரி, இவள் குணமாகும்வரை தனது கண்காணிப்பில் ஓரிரு தினங்கள் வைத்துக் கொள்வதே சரியாக இருக்கும்' என்று இறுதியாக ஓர் உறுதியான ஒரு முடிவுக்கு வந்தார். ஆகையால் அப்பெண்ணின் பூபோன்ற உடலை மெல்ல வாரியணைத்துத் தன் தோளின் மீது சாய்க்கும் வேளையில், இதுவரையிலும் இல்லாத இனிய உணர்வு  ஏற்படுவதைத் தனுசுமல்லர் உணர்ந்தார்.  அப்படியே அவளோடு குதிரையின் மீது அமர்ந்தவாறு  தனது  வைத்தியசாலைக்குப் புறப்பட்டார். அங்கு தகுந்த வைத்தியத்தைக் கொடுத்து முடிக்கும் வேளையில் இராஜகுருவாகிய  மகரகுரு அவசரமாக அங்கு நுழைவதை தனுசுமல்லர் கண்டார் . அதேசமயம் வைத்தியத்தால் மிதுனமதிக்கு சுயநினைவு மெல்ல மெல்ல திரும்பிக் கொண்டிருந்தது.

"குருவே ஏன் இவ்வளவு வேகம்? ஏதேனும் பிரச்சனையா?”

"அதெல்லாம் ஒன்றுமில்லை. தனுசுமல்லரே! எல்லாம் நல்லச்செய்தி தான்! இளவரசரின் மெய்க்காப்பாளர் என்கிற முறையில் உன்னிடத்தில் ஒன்றைச் சொல்லிவிட்டுப் போகலாம் என்று வந்தேன். நம் இளவரசருக்குத் தகுந்த மணப்பெண் எப்படி இருப்பார்? என்று  அங்க  இலட்சணங்களை  அலசி ஆராய்ந்த போது அப்பெண்ணின் வலது காலில் மூன்று  மச்சங்கள்  அருகருகே  இருக்கும்  என்பது தெரியவந்தது"
"அப்படியா குருவே! எனக்கு இந்த விஷயம் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. ஆனால்... அந்த அதிசய மங்கையை எங்கேப் போய் தேடுவது? எப்படிக் கண்டுபிடிப்பது?"  

"தேடுவோம்! கட்டாயம் கிடைப்பாள். இச்செய்தி வேறு எவருக்கும் தெரியக்கூடாது. முக்கியமாக நமது எதிரிகளுக்கு! ஏனென்றால் அவர்களின் காதுகளில் எட்டினால் அப்பெண்ணிற்கு அவர்களால் பல ஆபத்துகள் ஏற்படலாம். ஏன் மரணம் கூட ஏற்பட வாய்ப்பிருக்கின்றது"

"ஆகட்டும் குருவே, நான் இதில் எச்சரிக்கையாக இருக்கிறேன்" என்று சொல்லியதைக் கேட்டு மகரகுரு விடைபெற்றுச் செல்லும் வேளையில் தூங்கிக் கொண்டிருந்த  அப்பெண்ணைப் பார்த்து "யார் இந்தப் பெண்?" என்று கேட்க 

"யார்? என்று தெரியவில்லை குருவே! வழி தவறி வந்த பெண்ணாக இருப்பாள் என்று நினைக்கிறேன். சற்று சுகமில்லாமல் இருக்கிறாள். மயக்கம் தெளிந்தவுடன் யார்? என்று விசாரித்து அனுப்புகிறேன் குருவே" என்கிற பதிலைக் கேட்டவுடன் அவ்விடத்தைவிட்டு  வெளியேறினார்  மகரகுரு.

தனுசுமல்லர் கூர்மையாக அவளைப் பார்த்தார். அன்பைக் காட்டச் சொல்லும் மேனி, களங்கமில்லா முகப்பொலிவு, உறங்குவதிலும் நளினத் தன்மை ஆகியவை அவரின் இதயத்தை ஏதேதோச் செய்தன. அவளைப் பார்க்கப் பார்க்க உடலெங்கும் இனிமை பரவியது.  இப்படி ஆனந்தக்கனவில் மிதந்தவர் சட்டென்று சுயநினைவுக்குத் திரும்பினார். தன் வைத்திய அறிவின் காரணமாக இப்பெண்ணிற்கு மயக்கம் தெளிந்துவிட்டது என்பதை அறிந்தவராய்  "பெண்ணே,  போதும் உன் நடிப்பு! இனி எழலாம்" என்று தனுசுமல்லர் கூறியதும் அப்பெண் சட்டென்று எழுந்துவிட்டாள்.

"தங்களுக்கு எப்படி....? எனது மயக்கம் தெளிந்துவிட்டது என்று தெரியும்?"

"பெண்ணே! உன் இதயத்துடிப்பு, வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருப்பதை நான் கவனித்தேன்.  நாங்கள் பேசியதை நீ நன்றாகக் கேட்டிருக்கிறாய். நான் சொல்வது சரிதானே? இப்போது சொல். நீ யார்? எங்கள் எதிரி நாடான மேசகிரியிருந்து நீ இங்கு வந்தக் காரணம் என்ன?"

"இவ்வளவு விவரங்கள் தெரிந்தும்  என்னை  உங்கள்  இராஜகுருவிடம்  ஏன்  காட்டிக் கொடுக்கவில்லை?"

"பெண்ணே! ஆதாரம் இல்லாமல் அலசி ஆராயாமல் ஒரு பெண்ணின் மேல் அபாண்டமாய் பழிசுமத்தி அவளுக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதை நான் சிறிதும் விரும்பமாட்டேன்"

"உங்கள் கனிவான பேச்சிற்கும், இரக்கக் குணத்திற்கும், பெண்மையை உச்சமாக மதிப்பதற்கும் முதலில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுநாள் வரை  நானும்  கடகதேசத்தவர்களை  எதிரியாக நினைத்து வந்தேன். ஆனால் இன்று உங்களைச் சந்தித்த பிறகு என் மனம் மாறிவிட்டது. நீங்கள் நினைப்பதுபோல் இங்கு நானாக வரவில்லை. உங்கள் நாட்டில் உள்ளச்  சிலரின் சதிச்செயலின் காரணமாகத் தான் இங்கு வர நேர்ந்தது"   

"அது எப்படிச் சாத்தியம்? என்னால் நம்பவே முடியவில்லையே! சற்று விளக்கமாகச் சொன்னால்தானே உண்மை எதுவென்று தெரியவரும்? "

"சொல்கிறேன் மெய்க்காப்பாளரே. என் பெயர் மிதுனமதி.  மேசகிரியின்  இளவரசி  மீனாம்பிகையின் உயிர்த்தோழி" என்று அறிமுகம் செய்துகொண்டவள், சதிகாரர்களிடமிருந்து  'கன்னித்தேவி'க் கோவில் பூஜையை முடித்துவிட்டு வந்த இளவரசியைக் காப்பாற்றுவதற்காகத் தான் குதிரை வண்டிக்கடியில் ஒளிந்து வந்தது முதல், கடைசியில் தூக்கியெறியப்பட்டது வரை உணர்ச்சிகரமாகக் கூறினாள்.

அந்தப் பேசும் பதுமையின் அழகில் மயங்கியவர் சற்று விழிப்படைந்து "ஓ.. அவ்வளவு நடந்திருக்கின்றதா? உனது அறிவும் வீரமும் மிகவும் பாராட்டுக்குரியது"

"நீங்களும் 'வீராதி வீரர்' என்பதை அறிவேன். ஆனால் நான் இவ்வளவு முயன்றும் சதிகாரர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுகிறேன். ஆனால் ஒன்று மட்டும் உறுதி. 'விரைவில் இந்த கடகதேசத்திற்கு ஆபத்து வரப்போகிறது' என்றே நான் நினைக்கிறேன்" 

அதனைக் கேட்ட உடனே தனுசுமல்லருக்கு மீண்டும் தன் இராஜகுரு சொன்னது ஞாபகம் வந்தது.  அதோடு வரும் ஆபத்தை ஒரு பெண்ணால் தான் தடுக்க முடியும் என்றாரே! அப்படியானால் அப்பெண் அவளாக இருக்குமோ என்று ஒருகணம் மிதுனமதியை மனதில் இருத்திப் பார்த்தார்.

"நான் இருக்கும்போது கவலைவேண்டாம் மிதுனமதி. ஆனால் உங்கள் மதிமந்திரி ஏன் இவ்வாறு செய்தார்? என்பதுதான்  புரியாதப் புதிராக இருக்கின்றது? நீங்கள் விழுந்த இடத்திற்குச் சற்று தூரத்தில் தான் எங்களது சேனாதிபதியின் மாளிகை இருக்கின்றது. அவருக்கும் உங்கள் மதிமந்திரிக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ? அவர் என் நாட்டிற்குத் துரோகம் செய்வாரா? என்கிற சந்தேகமும் இருக்கின்றது?"

"ஏன் செய்யமாட்டார் மெய்க்காப்பாளரே! பதவி மோகம் வந்துவிட்டால், அதை அடைய மனிதர்கள் எதையும் செய்யத் தயங்கமாட்டார்கள், அது தெரியுமல்லவா உங்களுக்கு!"

"அரசியலில் இது சாதாரணம். இருந்தாலும் ஆபத்து நம் கண்முன்னே தெரியும்போது அதைத் தடுப்பதே நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லதல்லவா. ஆமாம் மிதுனமதி, இதெல்லாம் ஏன் எதற்காக நடக்கின்றது? இதற்கு யார் காரணம்?  என்பது பற்றி ஏதாவது பிடிபடுகின்றதா?"

"ஏன் இல்லை? நடந்த சம்பவங்களைச் சேர்த்துப் பார்த்தால்...  இப்போது தான் எனக்கு எல்லாமேப் புரிகின்றது. அதாவது இளவரசி மீனாம்பிகையை  நமது மதிமந்திரி  விருச்சிகர்  உதவியால்  உங்கள் சேனாதிபதி சிம்மசேனர் தான் கடத்தியிருக்க வேண்டும்" 

"அப்படிக் கடத்தினால்..."

"இவ்வாறான ஒரு வதந்தியை நம் மதிமந்திரியார் எந்நாடெங்கும் பரப்புவார், அதாவது இப்போது நம் எதிரி நாடான உங்கள் கடகதேச இளவரசர்  துலாவர்மர்தான்  எனது மேசகிரியின்  இளவரசி மீனாம்பிகையின் அழகில் மயக்கம் கொண்டு, அவரை மணமுடிக்கவேக் கடத்தியிருப்பார்' என்று"

"அவ்வாறு வதந்தியைப் பரப்பினால்..."

"இருநாடுகளின் பகை, போராய் முடியும். நேர்மைக்குப் பெயர் பெற்ற  கடகதேசத்தைத் நமது மதிமந்திரியின் தந்திரத்தால் மேசகிரியை  எளிதாகக் கைப்பற்றும். அதேவேளையில் உங்களது இளவரசர் துலாவர்மர் கைதாவார். அப்போது சேனாதிபதி  சிம்மசேனர்  ஏதுமறியாதுபோல், தானேக்  கடத்திக் கொண்டு வந்த  இளவரசியை அவரே அரண்மனைக்கு அழைத்து வரச்செய்து  தனது  இளவரசர் துலாவரமர் தான் இளவரசியைக் கடத்திச்  சிறைபிடித்து வைத்திருந்தார். நான் தான் இளவரசியைக் காப்பாற்றினேன்'’ என்று ஒரு மகாப்பொய்யைச் சொல்லி அனைவரையும் நம்ப வைப்பார். அவரே இளவரசி மீனாம்பிகையை எங்கள் அரசரிடம் ஒப்படைப்பது நல்லவர் போல் நடிப்பார்.  அந்தச்  சூழ்நிலையில்  உங்கள்  நாட்டுமக்கள்  அனைவரும்  இளவரசர்  துலாவர்மரை  அரியணையிலிருந்து இறக்கி, அவரை உங்கள் சேனாதிபதியின் மூலமாகச் சிறையில் அடைக்கும் படிச்சொல்வார்கள்! 

"பிறகென்ன?"

"அதன் பிறகு, சேனாதிபதி சிம்மசேனரே அடுத்த அரசராக முடிசூட்டிக் கொள்ள வேண்டுமென்று மக்கள் ஒரு மனதாகச் சம்மதம் தெரிவிப்பார்கள். அதன் பின் சேனாதிபதி  சிம்மசேனர்,   மதிமந்திரி விருச்சிகருடன் சேர்ந்து மீண்டும் ஏதாவது ஒரு சதி செய்து எனது  மேசகிரி  அரசர் ரிசபவேந்தரைக்  கொன்றுவிட்டு,  மதிமந்திரி  விருச்சிகரே  மீனாம்பிகையைத்  திருமணம் செய்து கொள்வதோடு மேசகிரிக்கு அரசராகவும் முடிசூட்டிக்கொள்வார்" என்று தனது புத்திக் கூர்மையை வெளிப்படுத்தினாள் மிதுனமதி.

"அடேயப்பா! ஒரு பெண்ணிற்கு இந்த அளவுக்கு இராஜாங்க அறிவா? உண்மையில் என்னை வியக்க வைக்கின்றது"

"மற்றுமொரு முக்கியமான உண்மையைச் சொல்கிறேன். அதனைக் கேட்டு நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்கள் இராஜகுரு சற்றுமுன் கூறியதை நான் பாசாங்காய் மயக்கத்தில் இருக்கும்போதுக் கேட்டேன். அவர் சொல்லியதுபோல் எங்கள் இளவரசி  மீனாம்பிகையின்  வலதுகாலில் அந்த அதிசய மூன்று மச்சங்கள் உள்ளன!"

"அப்படியா! அது உண்மைதானா? மிதுனமதி, அப்படியானால் நம் இளவரசருக்கான இளவரசி கிடைத்துவிட்டார்' என்கிற நிம்மதியும் திருப்தியும் அடைந்தார் தனுசுமல்லர். நல்ல எண்ணமுள்ளவர்களுக்குத் தகுந்த உதவிகள், தகுந்த நேரத்தில் யார் மூலமாவது எப்படியாவது கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கை வீண் போகவில்லை. இனித் தேடுகின்ற வேலை இல்லை. ஆனால் இளவரசியை ஆபத்திலிருந்துக் காப்பாற்றுவதே நம் முதல் வேலை" என்றார் தனுசுமல்லர்.

"ரொம்ப சரி. இளவரசியின் 'கன்னித்தேவி'க் கோவில் பூஜையின் பலன் கிடைத்துவிட்டதாக நம்புகிறேன். இப்போதைக்கு என் எண்ணம், வெகு சீக்கிரத்தில் எங்கள் இளவரசியை உங்கள் இளவரசருக்குத் திருமணம் செய்து வைத்து நம் இரு நாடுகளுக்கிடையே இருக்கும்  பகையை நீக்கி நல்லுறவை வளர்த்திட வேண்டும். இருநாட்டு மக்கள் ஒன்றுகூடி ஆதிபகவன் கோவிலின் கும்பாபிஷேகமும் தங்கத்தேரோட்டமும் சிறப்பாக நடக்க ஏற்பாடு செய்யவேண்டும்"  என்று  மிதுனமதி தன் ஆசையை வெளிப்படுத்தினாள்.

"மிதுனமதி, நாம் விரைவாக இளவரசியைத் தேடிக்கண்டுபிடித்து அவரை ஆபத்திலிருந்து காப்பாற்ற வேண்டும்"  

அதனை அவள் ஆமோதிக்க, உடனே அதற்கானத் திட்டத்தைத் தீட்டி மிதுனமதியிடம்  விளக்கினார்  தனுசுமல்லர்.

தொடரும் ...... பாகம்: 4
5.2.2016 திருத்தாமல் இருந்த 
 கடகதேசமும் மேசகிரியும்  (குறுநாவல்)
மதுரை  கங்காதரன்
இக்குறுநாவலில் வரும் முக்கிய கதா பாத்திரங்கள்

சென்ற வார தொடர்ச்சி ...
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

                                          பாகம் :3

அங்கு புதிதாக நின்று கொண்டிருந்த குதிரைவண்டியைப் பார்த்த மாத்திரத்தில் இளவரசி மீனாம்பிகை  "மதிமந்திரி விருச்சிகரேவழக்கமாக வரும்வண்டி வரவில்லையாஇது புதிதாக இருக்கின்றனவே!" என்று தனது புத்திசாலித்தனத்தை காட்டினாள்சற்றுத் தடுமாறியபடி  "அது வந்து.... வந்து... "என்று அவரின் நாக்கு உளறியது.

"ஏன் இவ்வளவு திணறுகிறீர்கள்அதையும் நானே சொல்கிறேன்அதாவது இன்றோடு எனது பூஜை முடிகின்றதல்லவாஅதனால் தானே!" என்று விருச்சிகர் வாயால் உண்மையை சொல்லவிடாமல் இளவரசி முந்திக்கொண்டாள்.

அவரும் "....ஆமாம்ஆமாம்அதுமட்டுமல்லஇன்று நீங்கள் வழக்கமான பாதையில் செல்லாமல் சுற்றுப்பாதையில் செல்லப் போகிறீர்கள்"  என்றதற்கு"மதிமந்திரி விருச்சிகர் எல்லாமே என் நன்மைக்காக செய்வார்என்று பரிபூரண நம்பிக்கையோடு "ஆகட்டும்என்றாள் மீனாம்பிகை.
நடப்பவையெல்லாம் மிதுனமதி கூர்மையாக கவனித்தாள்

குதிரைவண்டியின் படியில் மீனாம்பிகை தனது வலது கால் வைத்து ஏறும் போது வண்டிக்கடியில் ஒளிந்திருந்த மிதுனமதி ஏதேச்சையாக காலைப் பார்த்தாள். அந்தக் குதிக்காலின் மேல் ஆயுத எழுத்து (போன்று பெரிய மூன்றுமச்சங்கள் அருகருகே பார்த்து சற்று ஆச்சரியப்பட்டாள். அதை ரசிக்கும் சூழ்நிலையில் இல்லாததால் மேற்கொண்டு நடக்கும் சம்பவத்தில் கவனம் செலுத்தினாள்.

அரண்மனைக்கு புறப்படுமாறு இளவரசி ஆணையிட்டார்அவரின் பின்னால் விருச்சிகர் வருவது போன்று பாவனை செய்து நடுவிலேயே பிரிந்து சென்றுவிட்டார்வண்டியின் வேகம் பன் மடங்கு அதிகரித்ததுஅதனால் மிதுனமதியின் கைப்பிடி மெல்ல மெல்ல தளர்ந்ததுஒரு வளைவில் வேகமாகத் திரும்பும்போது மிதுனமதி தூக்கியெறியப்பட்டாள். அவ்வண்டி அனைவரின் கண்களிலிருந்து தப்பித்து சேனாதிபதி சிம்மசேனரின் பாதாள அறையை அடைந்தது. அப்போது தான் இளவரசி மீனாம்பிகை தன்னை யாரோ கடத்திவந்துள்ளார்கள் என்று உணர்ந்தாள்சுதாரிப்பதற்குள் அங்கிருந்த பெண்ஒருவர் மீனாம்பிகையின் மூக்கருகில் ஒருவித பச்சிலை காட்ட அதை முகர்ந்தவுடன் மயக்கமுற்றாள்.

மறுநாள் காலை இளவரசரின் ஆணைப்படி தங்கத்தேரை சுத்தப்படுத்தி அதை மறுசெப்பனிடும் பணிகளின் முன்னேற்றத்தை கவனிக்க தனது குதிரையில் சென்று கொண்டிருந்த மெய்க்காப்பாளரும் சகலகலாவல்லவராகிய தனுசுமல்லர், சற்றுத் தொலைவில் யாரோ 'ஐயோ.. அம்மாஎன்று முனங்கல் ஒலி கேட்க அந்த திசையை நோக்கி விரைந்தார்.

அங்கு.... ஒரு பெண் தலையில் அடிபட்டும் அந்த இடத்திலிருந்து இரத்தம் கசிவதுடன் மெல்ல மெல்ல தன் சுயநினைவு இழந்து கொண்டிருப்பதைப் பார்த்தவுடன் 'யார் இந்தப் பெண்இங்கு எப்படி வந்தாள்இந்நிலை இவளுக்கு எப்படி வந்ததுஎந்த நாடாக இருக்கும்?' என்கிற பல கேள்விக்கு பதிலாகஅவளது நாடி பிடித்து பார்த்ததில் கிடைத்ததுஆம்அவளது மணிக்கட்டுப் பகுதியில் நட்சத்திரக்குறி ஒன்று இருப்பதைப் பார்த்து திடுக்கிட்டுப் போனார்.இவள்... தமது எதிரி நாடான மேசகிரியைச் சேர்ந்தவள்தங்கள் நாட்டைக் காக்க எதையும் செய்யும் துணிச்சல் உள்ளவர்கள்எதற்காக இங்கு வந்திருப்பார்?ஒருவேளை அரண்மனை ஜோதிடர் மகரகுரு செல்லியது போல்   இந்நாட்டிற்கு  ஆபத்து இவளால் வந்துவிட்டதோஅதேசமயத்தில் ஒரு பெண்ணால் தான்தடுக்க  முடியும் என்றும் சொன்னாரேஅந்தப் பெண் இவளாக இருக்குமோ?  இவளுக்கு வைத்தியம் பார்ப்பதாவேண்டாமாஇந்த அழகிக்குப் பின்னால் ஆபத்து இருக்குமோஎன்கிற குழப்பம் நிலவும் போது அவரது இரக்ககுணமே வெற்றி பெற்றது.

ஒரு துணியால் இரத்தம் கசிவதை துடைத்துவிட்டு பச்சிலை வைத்து கட்டிய போது முழுவதுமாக மயங்கி துவண்டு விழுந்தாள்யாரும் எவரும் இங்குஇல்லாத நிலையில் தானும் விட்டுச் சென்றால் உயிர் போகும் அபாயம்          உண்டாகலாம்எது எப்படி இருந்தாலும் தன் கண்காணிப்பில் சில தினங்கள்     இருக்கட்டும் என்று எண்ணி அப்பெண்ணின் பூப்போன்ற உடலை மெல்ல வாரியணைத்து தன் தோள் மீது சாய்க்கும் வேளையில் இதுவரையிலும் இல்லாதஉணர்வு ஏற்படுவதை தனுசுமல்லர் உணர்ந்தார்அப்படியே அவளோடு குதிரையில் அமர்ந்தவாறு தனது வைத்தியச்சாலைக்கு சென்று சகலவிதமான வைத்தியத்தைக் கொடுத்துக் முடிக்கும்வேளையில் ஜோதிடர் மகரகுரு அங்கு நுழைந்தார்மிதுனமதிக்கு சுயநினைவு மெல்ல மெல்ல திரும்பிக் கொண்டிருந்தது.

"ஏன் ஜோதிடரே இவ்வளவு வேகம்ஏதேனும் பிரச்சனையா?”
"அதெல்லாம் ஒன்றுமில்லைதனுசுமல்லரேஎல்லாம் நல்ல செய்தி தான்!"
இளவரசரின் மெய்க்காப்பாளர் என்கிற முறையில் ஒன்றைச் சொல்கிறேன்நம் இளவரசருக்குத் தகுந்த இளவரசி எப்படி இருப்பார்கள் என்று அங்கஇலட்சணங்களை அலசி ஆராய்ந்த போது அவரின் வலது காலில் மூன்று மச்சங்கள் அருகருகே இருக்கும் என்பது தான் தெரியவந்தது "
"அப்படியா ஜோதிடரேஅந்த அதிசய மங்கையை எங்கு தேடுவது?"

"தேடுவோம் கட்டாயம் கிடைப்பாள். இச்செய்தி வேறு யாருக்கும் தெரியக்கூடாது. ஏனென்றால் அவர்களின் காதுகளில் எட்டினால் அப்பெண்ணிற்கு அவர்களால் பல பத்துக்கள் ஏற்படலாம்"

"ஆகட்டும் ஜோதிடரேஎன்று விடைபெற்று செல்லும் வேளையில் தூங்கிக் கொண்டிருந்த அப்பெண்ணை பார்த்து "யார் இந்தப் பெண்?" என்று கேட்க"யாரோ வழி தவறி வந்த பெண்சற்று சுகமில்லாமல் இருக்கிறாள்மயக்கம் தெளிந்தவுடன் யார் என்று விசாரித்து அனுப்ப வேண்டும்என்கிறபதிலைக் கேட்டு வெளியேறினார் ஜோதிடர் மகரகுரு.

தனுசுமல்லர் கூர்மையாக அவளைப் பார்த்தார்கள்ளமில்லா முகப்பொழிவுஉறங்குவதிலும் நளினம் அகியவை அவரின் இதயத்தைத் துளைத்தது.அவளைப் பார்க்க பார்க்க உடலெங்கும் இனிமை பரவியதுஇப்படி ஆனந்தகனவில் லையித்தவர் சட்டென்று சுயநினைவுக்குத் திரும்பியவராய்தன் வைத்திய அறிவின் காரணமாக இப்பெண்ணிற்கு மயக்கம் தெளிந்துவிட்டது என்பதை அறிந்தவராய் "பெண்ணேபோதும் நடிப்பு! இனி எழலாம்என்று தனுசுமல்லர் கூறியதும் அப்பெண் சட்டென்று எழுந்துவிட்டாள்.

"தங்களுக்கு எப்படி.... எனது மயக்கம் தெளிந்துவிட்டது என்று தெரியும்?"
"பெண்ணேஅதுவாதங்களின் இதயத்துடிப்பு வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருப்பதை நான் கவனித்தேன்நாங்கள் பேசியதை நீங்கள் கேட்டுயிருப்பீர்கள்இப்போது சொல்லுங்கள்நீங்கள் யார்எங்கள் எதிரி நாடான மேசகிரியிருந்து இங்கு வந்தக் காரணம்?"

"இவ்வளவு விவரங்கள் தெரிந்தும் ஏன் என்னை  உங்கள் ஜோதிடர் மகரகுருவிடம் என்னைக் காட்டிக் கொடுக்கவில்லை?"
"பெண்ணேதாரம் இல்லாமல் அலசி ஆராயாமல் ஒரு பெண்ணின் மேல் அபாண்டமாய் பழிசுமத்தி அவபெயர் ஏற்படுத்துவதை நான் சிறிதும் விரும்பமாட்டேன்"
"உங்கள் கனிவான சொல்லிற்கும்இரக்க குணத்திற்கும்பெண்மையை உச்சமாக மதிப்பதற்கும் முதலில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.நானும் கடகதேசத்தவர்களை எதிரியாக இதுவரை நினைத்து வந்தேன்இன்று உங்களை சந்தித்த பிறகு என் மனம் மாறிவிட்டதுஇங்கு நானாக வரவில்லைஇந்த நாட்டில் உள்ள சிலர் இங்கு வரச் செய்துவிட்டார்கள்"

"அப்படியாஎன்னால் நம்ப முடியவில்லையேசற்று விளக்கமாகக் கூறுங்களேன்"
"என் பெயர் மிதுனமதிமேசகிரி இளவரசி மீனாம்பிகையின் உயிர்த்தோழிஎன்று தான் சதிகாரர்களிடமிருந்து இளவரசியைக் காப்பாற்ற குதிரை வண்டிக்கடியில் ஒளிந்து வந்தது முதல் தான் தூக்கியெறிந்தது வரை உணர்ச்சிகரமாகக் கூறினாள்.
அந்த பேசும் பதுமையின் அழகில் மயங்கியவர் சற்று விழிப்படைந்து "உனது வீரம் மிகவும் பாராட்டுக்குரியது"

"நீங்களும் 'வீராதி வீரர்என்பதை அறிவேன்இவ்வளவு முயன்றும் சதிகாரர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லைஆனால் ஒன்று மட்டும் உறுதி.விரைவில் இந்த கடகதேசத்திற்கு ஆபத்து வந்துவிட்டதுஎன்பதைக் கேட்ட உடனே தனுசுமல்லருக்கு ஜோதிடர் மகரகுரு சொன்னது ஞாபகம் வந்தது.அதோடு ஒரு பெண்ணால் தான் தடுக்க முடியும் என்ற போது மிதுனமதியை மனதில் இருத்தினார்.
"கவலைவேண்டாம் மிதுனமதிஉங்கள் மதிமந்திரி விருச்சகர் ஏன் இவ்வாறு செய்தார் என்பது புரியாத புதிராக இருக்கின்றதுநீங்கள் விழுந்த இடத்திற்குச் சற்று தூரத்தில் தான் எங்களது சேனாதிபதி சிம்மசேனரின் மாளிகை இருக்கின்றதுஅவர் நாட்டிற்கு துரோகம் செய்வாரா? என்கிற சந்தேகம் இருக்கின்றது?"

"ஏன் செய்யமாட்டார் தனுசுமல்லரேபதவி மோகம் பிறந்துவிட்டால் அதை அடைய மனிதர்கள் எதையும் செய்யத் தயங்கமாட்டார்கள் அல்லவா!"
"மிதுனமதி உங்களுக்கு ஏதேனும் விடை கிடைக்கின்றதா?"

"இப்போது தான் எனக்கு எல்லாமே புரிகின்றதுஅதாவது இளவரசி மீனாம்பிகையை நமது மதிமந்திரி விருச்சிகர் உங்கள் சேனாதிபதி சிம்மசேரின் உதவியால் கடத்தியுள்ளார்"

"அப்படி கடத்தினால்..."
"எதிரி நாடான கடகதேச இளவரசர்தான் மேசகிரி இளவரசி மீனாம்பிகையை கடத்தியிருக்கிறார் என்கிற வதந்தியை பரப்புவார்"
"பரப்பினால்..."
"இருவரின் பகை போராய் முடியும்கடகதேசத்தை மேசகிரி எளிதாக கைப்பற்றும்இளவரசர் துலாவர்மர் கைதாவார்அப்போது நல்ல பிள்ளை போல் தான் கடத்தி வந்த இளவரசியை இளவரசர் துலாவரமர் தான் கடத்தி சிறைபிடித்து வைத்திருந்தார் என்று மகா பொய் சொல்லி அனைவரையும் நம்ப வைப்பார்அவரே இளவரசி மீனாம்பிகையை விடுவிப்பது போல் நடிப்பார்அந்த சூழ்நிலையில்  இளவரசர் துலாவர்மரை அரியனையிலிருந்து தூக்கி எறிந்துவிட்டு சேனாதிபதி சிம்மசேனரை  அரசராக முடிசூட்டிக் கொள்ள ஒரு மனதாகச் சம்மதிப்பர்அதன் பின் சேனாதிபதி சிம்மசேனர்,   மதிமந்திரி விருச்சிகருடன் சேர்ந்து மீண்டும் சதி செய்து மேசகிரி அரசர் ரிசபவேந்தரைக் கொன்று மதிமந்திரி விருச்சிகரே மீனாம்பிகையை திருமணம்முடித்துக்கொள்வதோடு மேசகிரியின் அரசராகவும் ஆவார்என்று தனது புத்திக் கூர்மையை வெளிப்படுத்தினாள் மிதுனமதி.
"அடேயப்பாஒரு பெண்ணிற்கு இவ்வளவு திறமையாஉண்மையில் என்னை வியக்க வைக்கின்றது"

"மற்றுமோர் உண்மையான இரகசியம்உங்கள் ஜோதிடர் மகரகுரு கூறியதை நான் மயக்கத்தில் இருப்பது போல் நடிக்கும்போது கேட்டேன்அதாவது எங்கள் இளவரசி மீனாம்பிகையின் காலில் அந்த அதிசய மூன்று மச்சங்கள் உள்ளன!"

"அப்படியாபார்த்தாயா மிதுனமதிநல்ல எண்ணமுள்ளவர்களுக்கு தகுந்த உதவிகள் யார் மூலமாவது எப்படியாவது கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கைவீண்போகவில்லை. இனி தேடுகின்ற வேலை இல்லைஎன்றார் தனுசுமல்லர்.
"ஆனால் எங்கள் இளவரசியையும் உங்கள் இளவரசரையும் திருமணம் செய்து வைத்து நம் இரு நாடுகளுக்கிடையே நல்லுறவை வளர்த்திட வைக்கவேண்டும்என்று மிதுனமதி கூற அதற்கான திட்டத்தை தனுசுமல்லர் விளக்கினார்.

தொடரும் ......


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

No comments:

Post a Comment