Pages

Tuesday 29 September 2015

SANGAM4 CELEBRATED ONE WEEK TAMIL FUNCTION IN MADURAI.

மதுரைத் தென்றல் வந்தது காணீர்
SANGAM4 CELEBRATED ONE WEEK TAMIL FUNCTION IN MADURAI.
மதுரையில் 13.09.15 ஞாயிற்றுக் கிழமை அன்று
சங்கம்4 நடந்திய கவியரங்கத்தில்
மதுரை கங்காதரன்
பாடிய புதுக்கவிதை

            








மதுரைத் தென்றல் வந்தது காணீர்
SANGAM4 CELEBRATED ONE WEEK TAMIL FUNCTION IN MADURAI.
மதுரையில் 13.09. 15 ஞாயிற்றுக் கிழமை அன்று
சங்கம்4 நடந்திய கவியரங்கத்தில்
மதுரை கங்காதரன்
பாடிய புதுக்கவிதை
தமிழ்த்தாய் வாழ்த்து

எந்நாளும் தேன் தமிழ்
என் நாவில் தவழச் செய்திடும்
என் தமிழ் தாயே
உன் திருவடியைத் தொழுது வணங்குகிறேன்.

தலைப்பு: மதுரைத் தென்றல் வந்தது காணீர்

மதுரையில் நான்காம் தமிழ் சங்கம்
மனிதர்களின் வாழ்வியலில் ஓர் அங்கம்
மங்காப் புகழின் சொக்கத் தங்கம்
மனுநீதி காக்கும் மாசற்ற திலகம்

ஆங்கிலத்தால் பன்மொழிகள் அழிந்தாலும்
ஆணிவேராய் தமிழைக் காத்திடுமே இச்சங்கம்
அந்நியமொழிக் கலப்பில் சாய்ந்துவிடாமல்
அசையாமல் நிற்கச் செய்திடுமே இச்சங்கம்.

காவியச் சித்திரமான சிலப்பதிகாரம்
கருணைகடல் சொக்கரின் திருவிளையாடல்
புட்டுக்காக மண் சுமந்த வைகையாறு
பழமையின் இலக்கியத் தென்றலாம் இம்மதுரை.
 
தமிழை படிக்கும் போது அறிவு சிறக்கும்
தமிழை பாடும் போது இனிமை பெருகும்
தமிழ்மொழி கேட்கும் போது மனம் மகிழும்
தமிழை அசைபோடும் போது அறுசுவை சுரக்கும்

முத்தமிழ் வளர்த்த முச்சங்கங்களின் பிறப்பிடம்
முக்கால வரலாற்றில் முத்திரை பதித்திடும்
சிங்காரத் தேரின் சித்திரைத் திருவிழாவாக
சிந்தையில் கலந்திடுமே நான்காம் தமிழ் சங்கம்.

வளர வேண்டும் தமிழ்மொழி
வாழ வேண்டும் தமிழர்கள்
சிறக்க வேண்டும் தமிழ் மண்


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

No comments:

Post a Comment