Pages

Saturday 28 March 2015

ந.மணிமொழியனார் அகவை எழுபது மங்கல விழா


.மணிமொழியனார் அகவை எழுபது 
மங்கல விழா
புதுக்கவிதை 
நாள்: 2.4.2015 இடம்: காலேஜ் ஹவுஸ் , மதுரை .






வாருங்கள் கவிஞர்களே என வாயார வரவேற்பவராம்
பலப்பல கவிதைகளைத் கேட்க வந்தவராம்

மோகம் முப்பதை வென்றவராம்
ஆசை வயதை ஐம்பதைக் கடந்தவராம்

ஓசையில்லாமல் எழுபதைத் தொட்டவராம்
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்கிறவராம்

தமிழை உயிரினும் மேலாய் நேசிப்பவராம்
வள்ளுவரை தெய்வமாய் மதிப்பவராம்

.மணிமொழியனார் என நாமம் உள்ளவராம்
திருவருட்செம்மல் அடைமொழி கொண்டவராம்

திருக்குறளை காற்றாக சுவாசிப்பவராம்
குறளை இனிய உணவாக ருசிப்பவராம்

திருவள்ளுவரின் வாழ்க்கையே வாழ்பவராம்
தமிழ்த் தாயின் வாழ்த்தை பெற்றவராம்

எப்பிறவியிலும் மறையாப் புகழ் பெறுபவராம்
தமிழ் மொழியால் சாகா வரம் பெற்றவராம்

கவிஞர்களை போற்றும் உள்ளம் உள்ளவராம்
வாரி வழங்கும் வள்ளல் குணம் கொண்டவராம்

திருக்குறள் பேரவை கிளைகளை பல திறந்தவராம்
திருக்குறளை உலகெங்கும் பரப்புபவராம்


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&





No comments:

Post a Comment