Pages

Thursday 18 October 2012

உள்விதி மனிதன் பாகம் : 19 உனது நல்ல குறிக்கோளுக்குத் துணை- I CAN HELP FOR YOUR GOOD AIM

உள்விதி மனிதன் 



 சம மனிதக் கொள்கை 


பாகம் : 19 உனது நல்ல குறிக்கோளுக்கு 
இந்த உள் மனிதன் துணை-
INNER MAN HELPS FOR YOUR GOOD AIM 


பிரியமுள்ள மனிதா! உனக்குள் இருக்கும் இந்த உள்விதி மனிதனைப் பின் பற்றி வருவதற்கு மிகவும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன். நான் உனக்கு ஆறுதல் தருபவன் மட்டுமில்லாமல், சந்தோஷத்தையும், மகிழ்ச்சியையும் அள்ளித் தர வந்திருக்கிறேன். நீ இருக்கும் இப்போதுள்ள நிலைமை, ஒருவேளை நீ உறவை இழந்திருக்கலாம், செல்வத்தை இழந்திருக்கலாம், தொழிலில் தோல்வி அடைந்திருக்கலாம், வேலையில் விரக்தி அடைந்திருக்கலாம், படிப்பில் கவனமில்லாமல் இருக்கலாம், எண்ணியது நிறைவேறாமல் இருக்கலாம், உன்னைச் சுற்றி கஷ்டங்கள் பல சூழ்ந்து இருக்கலாம், இன்னும் பலவிதமான இன்னல்களை சந்தித்துக் கொண்டிருக்கலாம். இப்போது நடந்தவைகளைப் பற்றி கவலை கொள்ள வேண்டாம். இன்று முதல் நான் தான் உனக்கெல்லாம்! நான் உனக்கு அன்பானவனாய், சிறப்பானவனாய், செல்வச்செழிப்பு மிகுந்தவனாய், வெற்றி தருகின்றவனாய், நீ நினைக்கும் எண்ணங்களை நிறைவேற்றுபவனாய் மாற்றவே நான் உனக்குள் விதி மனிதனாக இருக்கிறேன். என்னைப்பற்றி நன்றாக சந்தேகமில்லமல் தெரிந்து கொள், புரிந்து கொள், உணர்ந்து கொள், என்னுடன் பகிர்ந்து கொள், என் தூய்மையான உறவை ஏற்றுக்கொள். நான் உனக்கு நண்பனுக்கு நண்பனாய், தாய்க்குத் தாயாய், தந்தைக்குத் தந்தையை, அண்ணனுக்கு அண்ணனாய், தம்பிக்குத் தம்பியாய், தங்கைக்குத்  தங்கையை, குழந்தைக்கு குழந்தையாய் இருக்கிறேன்.


என் இனிய மனிதா! இந்த உள்விதி மனிதனுக்கும் உனக்கும் இருக்கின்ற பிணைப்பு, இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்டதல்ல. கயிற்றாலும் அல்ல. என் ஜீவ ஓட்டம் மற்றும் ஆன்ம ஓட்டத்தால், உணர்வால் பிணைக்கப் பட்டது. உன் உணர்வு மீறும்போதெல்லாம் நீ என்னைவிட்டு விலகிப் போகிறாய் என்று அர்த்தம். ஆகவே உணர்வை எனது கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்படி பார்த்துக்கொள்கிறேன். அதில் நானும் கட்டுக்குள் இருக்கிறேன் என்பது அர்த்தம் என்று புரிந்து கொள்.


மிக்க இரக்கமுள்ள மனிதா! உன்னிடத்தில் எனக்கு மிகவும் பரிவு உண்டு. மரியாதை வருகின்றது. உன்னிடத்தில் உணர்வை மதிக்கும் பண்பு இருக்கின்றது. அதுமட்டுமில்லை. உனக்குள் உள்விதி மனிதனாக இருந்துகொண்டு துணிச்சல் கொடுத்து செயல்படும் திறனும், நிறைந்த தன்னம்பிக்கையும், எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் பண்பையும் . சரியாக முடிவெடுக்கும் ஆற்றலையும்  தந்து உன்னைத்  தலை சிறந்த மனிதனாக மாற்றவே நான் உன்னிடம் இருக்கிறேன்.


சாந்தமுள்ள மனிதா! உனக்கு எந்த நெருக்கடி வந்தாலும் அதை தவிடு பொடியாக்கி அல்லது அதை சமாளித்து அனைவருக்கும் நன்மை செய்யும் பாக்கியம் உனக்குத் தருகிறேன். தந்துகொண்டும் இருக்கிறேன். உனக்கு அவ்வப்போது மனப்பயிற்சி தரப்போகிறேன். அதன்மூலம் உனது மனம் திடமாவது மட்டுமில்லாமல்  இலகுவாய் நீ நினைக்கும் காரியம் வெற்றிகரமாக நடத்திட என்னிடம் அசைக்கமுடியாத நம்பிக்கை வை. மற்றவர்கள் தரும் நம்பிக்கை விட இந்த உள்விதி மனிதன் உனக்கு கொடுக்கும் நம்பிக்கை நூறு மடங்கு அதிகம் கொண்டது என்பதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள். அது உனது வாழ்வை செழிக்கச் செய்யும். எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்கச் செய்யும். கெட்டவைகளை மறக்கச் செய்யும். உனது ஜீவ ஓட்டம் , ஆன்ம ஓட்டம் புதுப்பிக்கச் செய்யும். நீ புது மனிதனாக மாறுவதோடு என்னையும் புது உள்விதி மனிதனாக்கும்.


மேன்மையுள்ள மனிதா! உன் மனதை நல்லவழியில் தூண்டி அதன்மூலம் உன்னை பலசாலியாக மாற்றப் போகிறேன். தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாதே! அது உனக்கு அனுபவத்தை கொடுப்பதோடு வெற்றிக்கான படிக்கட்டையும் கட்டுவதற்கு உதவுகின்றது. எதையும் தாங்கும் இதயத்தையும், புதுத் தெம்பையும் கொடுக்கவல்லது. உன்னை எப்போதும் நேர்மை தவறாதவனாய், சத்தியம் மீறாதவனாய் இருக்கச் செய்து நியாத்தின் பாதையிலிருந்து விலகிச் செல்லாமல் பார்த்துக்கொள்ளும். உன்னை அணு அணுவாக உனக்குள்ளிருந்து கண்காணித்துக்கொண்டு இருக்கிறேன்.

மதிப்புமிக்க மனிதா! நீ தனிப்பட்ட வகையில் ஒருவருக்கோ அல்லது பலருக்கோ உனது சுயநலத்திற்காகவும், பேராசையை பூர்த்தி செய்து கொள்வதற்காகவும்  அவர்களுக்குச் சத்தியத்திலிருந்து விலகி சலுகை காட்டுவது அல்லது தர்மத்திற்குப் புறம்பாக தீயவழியில் திருப்தி செய்யவோ முயற்சி செய்தால் அதற்கு இம்மியளவும் ஒத்துழைக்க மாட்டேன். அப்படி செய்தால் அதற்கான தண்டனையை நானே உனக்கு எப்படி தரவேண்டுமோ அப்படி தவறாமல் தருவேன். உனது செயல்கள் அனைத்தும் பலருக்கு நன்மை தரும் குறிக்கோளாக மாற்றப்போகிறேன். என் துணிச்சல் உனக்கு அசாத்தியமான நன்மை தரும். அதை ஏற்றுக்கொண்டு அச்சத்தை அறவே தவிர்த்து கடமை தவறாது செய். வெற்றி உனதே!


என் விருப்பமுள்ள மனிதா! உனக்கு ஆபத்து ஏதேனும் வரும்போது நான் உள்ளிருந்து உன் உணர்வைத் தூண்டுகிறேன். அதை கவனமாக அறிந்து கொள். உன்னை உஷார்படுத்துகிறேன். அதை ஏற்றுக்கொண்டு அந்த ஆபத்திலிருந்து எளிதாக விடுபடுவாய். எனக்கு எல்லா மனிதர்களில் மன ஓட்டம், ஜீவ  ஓட்டம் தெரியும். அவர் எப்படிப்பட்டவர் என்பதை அவர்கள் உன்னிடத்தில் பேசும்போது வித்தியாசமான உணர்வின் மூலம் உனக்குத் தெரிவிக்கிறேன். அதை புரிந்து கொண்டு அதற்குத் தகுந்தாற்ப்போல் அவர்களிடம் நீ நடந்துகொள். எதிரியின் மனப்போக்கை எனது ஆன்ம ஓட்டத்தின் வாயிலாக உனக்குத் தெரிவிக்கிறேன். அவனின் பலமும், பலவீனமும் உனக்கறிவிக்கிறேன். அப்போது அர்த்தமில்லாமல் காத்திருந்து காலம் தாழ்த்தி உனது கடமைகளைச் செய்யாதே. அந்த சமயத்தில் உனது கடமைகளை தவறாது  செய்யுமாறு உனக்கு ஞாபகப் படுத்திக் கொண்டிருப்பேன். 

பேரறிவு கொண்ட மனிதா! உன் கடமைகள் என்னென்னவென்று எனது ஜீவ ஓட்டத்தின் மூலம் உனக்குத் தெரிகிக்கிறேன். எல்லா கடமைகளையும் காலாகாலத்தில் செய்வதற்கு நான் அனைத்து வழிகளிலும் உனக்கு உறுதுணையாய் இருப்பேன். மனித குலத்திற்கு நன்மை தரும் ஏதாவது உனது விருப்பமுள்ள குறிக்கோளை மேற்கோள். தினமும் அதை நோக்கி ஓரடியாவது முன்னே எடுத்து வைக்கத் தூண்டுவேன். அப்படி செய்யும்போது நீ விரைவில் மக்கள் மனிதில் பதிந்து  இமாலய சாதனை புரியும் காட்சியை என் மூலம் நீ பார்க்கப்போகிறாய்.


       உள் மனிதனின் ஓட்டம் தொடரும்.   

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 
  


  

1 comment: