Pages

Monday 13 August 2012

நிதானம் வெற்றியைத் தரும் - அனுபவ வாழ்கை பொன் வரிகள்


அனுபவ   வாழ்கை பொன் வரிகள் -
 மதுரை கங்காதரன்



நிதானம் வெற்றியைத்  தரும் 




இன்றைய காலகட்டத்தில் எல்லாமே எதற்கெடுத்தாலும் அவசரம் அவசரம் தான். அப்படி அவசரமாக செய்த வேலையின் முடிவு பூஜ்யம் தான். அதற்கு காரணம் என்ன ? 

 

சிந்தனையும் செயலும் ஒன்றாக இருந்தால் தான் ஒரு காரியம் வெற்றிபெறும். அவசரப்படும்போது சிந்தனை சிதறுகிறது. உடம்பு படபடக்கின்றது. உடலும் மனமும் நிலைத்தன்மையை இழந்து விடுகின்றது.அதன் பிரதிபலிப்பு செயலில் காட்டுகின்றது. உணர்ச்சி வேகம் அனைத்தையும் மிஞ்சி வேறு எதையும் சிந்திக்காதபடியும், கேட்காதபடியும்    செய்து விடுகின்றது. மூளை வேலை செய்வதில்லை.  அப்போதைக்கு ஒப்பேத்தினால் போதும் என்கிற உணர்வே மேலோங்கி நிற்கின்றது. ஆய்வு செய்வதற்கோ, திட்டமிடுவதற்கோ, சுமூகமானமுறையில் தீர்ப்பதற்கு ஆயுத்தமாவதற்கோ நேரமில்லாமல் ஏனோதானோவென்று அரைகுறையாக செயல் நடந்து முடிந்து விடுகின்றது. 

ஆகவே செயல் செய்வதற்கு முன் திட்டமிடுங்கள், வேலைகளை முறையாக திறமையுள்ள வர்களுக்கு பிரிந்துக்கொடுங்கள். செய்த வேலைகளை ஆய்வு செய்து சரியாக செய்திருப்பதை உறுதி படுத்திக் கொள்ளுங்கள். வேலை செய்பவர்களை தட்டிகொடுங்கள். பிறகு நீங்கள் தான் சாதனையாளர்.

   

நிதானம் கொள்ளுங்கள் !


திட்டமிடுங்கள் !        

          

வெற்றி அடையுங்கள் !


  


தொடரும் ...     

******************************
******************
             
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

மிகநன்று                      அல்லது 

நன்று                             அல்லது 

பரவாயில்லை           அல்லது 

இன்னும் தெளிவு       தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 
                        

No comments:

Post a Comment